சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்: 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

Last Updated : Jun 19, 2017, 12:53 PM IST
சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்: 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி title=

உலகமே எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்தியா அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.

பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஆமிர் வீசிய முதல் ஓவரின்  3-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த விராட் கோலி5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். தவான் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்தியா 33 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுக்களை இழந்தது.

டோனி 4 ரன்னிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்தில் 76 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதன்பின் வந்த ஜடேஜா 15 ரன்னிலும், அஸ்வின், பும்ப்ரா தலா ஒரு ரன்னிலும் அவுட்டாக இந்தியா 30.3 ஓவரில் 158 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

எனவே இதனால் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

கடந்த 1-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று நடந்த இறுதி போட்டியுடன் முடிவடைந்தது.

Trending News