வைஷாக அமாவாசை திதி எப்போது கொடுக்கலாம்? உகந்த நேரம் இதோ.. 3 மகாதோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள்

வைஷாக அமாவாசை அன்று உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 3 'மகாதோஷம்' நீக்கும் எளிய ஜோதிட பரிகாரங்களை செய்யுங்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 11.23 மணி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 11.23 மணி வரை வைஷாக அமாவாசை இருக்கும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2023, 06:15 AM IST
வைஷாக அமாவாசை திதி எப்போது கொடுக்கலாம்? உகந்த நேரம் இதோ.. 3 மகாதோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள் title=

இந்த ஆண்டு வைஷாக அமாவாசை ஏப்ரல் 20 வியாழன் அன்று வருகிறது. இந்த நாளில் சனி தோஷம், காலசர்ப்ப தோஷம், பித்ரா தோஷம் ஆகிய 3 'மகாதோஷங்கள்' நீங்கலாம். இந்த தோஷங்கள் யாருக்காவது இருந்தால், விடுபடுவதற்கான எளிய பரிகாரங்களை செய்து, அதில் இருந்து விடுபடுங்கள். அதேநேரத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வைஷாக அமாவாசை அன்று நிகழவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வைஷாக அமாவாசை தேதி 2023

இந்த ஆண்டு வைஷாக அமாவாசை ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 11:23 மணி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 09:41 மணி வரை நிகழ இருக்கிறது. வைஷாக அமாவாசை திதி ஏப்ரல் 20 அன்று சூரிய உதயத்தின்போது கொடுக்கலாம். 

மேலும் படிக்க | இந்த ராசிகள் மீது சனியின் சுப பார்வை: இவங்களுக்கு அடிச்சது ஜாக்பாட், தலைவிதி மாறும்

வைஷாக அமாவாசையில் சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி வைஷாக அமாவாசை அன்று நிகழ உள்ளது. சூரிய கிரகணத்தின் நேரம் காலை 07:04 முதல் மதியம் 12:29 வரை. இந்த சூரிய கிரகணத்தின் சூதக் காலம் செல்லாது, ஏனெனில் இது ஒரு நிழல் சூரிய கிரகணம். அத்தகைய சூழ்நிலையில், வைஷாக அமாவாசை நாளில், நீங்கள் சூரிய கிரகணம் முடியும் முன் அல்லது பின் மகாதோஷத்தைப் போக்க பரிகாரங்களை செய்யுங்கள். 

வைஷாக அமாவாசை 2023: 'மகா தோஷத்தில்' இருந்து விடுபட 3 வழிகள்

1. சனி தோஷம்: 

வைஷாக அமாவாசையை முன்னிட்டு தென்னிந்தியாவில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தல் வேலை உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பார். அவர்கள் வைஷாக அமாவாசை அன்று சனிபகவானை முறைப்படி வழிபடுங்கள். சனி கோவிலுக்குச் சென்று கருப்பு எள், கடுகு எண்ணெய், கருப்பு அல்லது நீல நிற துணியை கொடுத்து ஆசி பெற்றுக் கொள்ளுங்கள். 

2. பித்ரா தோஷ பரிகாரங்கள்: 

பித்ரா தோஷம் ஒரு பெரிய தோஷமாக கருதப்படுகிறது. ஒரு குடும்பத்தில் அமைதியின்மையும், குழப்பமும் பீடித்து இருக்கும். வீட்டில் இருக்கும் அசாதாரணமான சூழலால் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. இந்த பிரச்சனையில் இருப்பவர்கள் வைஷாக அமாவாசை அன்று புனித நீரில் நீராடிவிட்டு, முன்னோர்களுக்கு வழிபாடு செய்யுங்கள். பின்னர், தானம் செய்யுங்கள். இதன் மூலம் பித்ருக்கள் திருப்தியடைந்து ஆசி வழங்குவதால் பித்ரா தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

3. காலசர்ப்ப தோஷ பரிகாரம்: 

ஜாதகத்தில் மற்ற ஏழு கிரகங்களுடன் ராகு-கேதுவின் சிறப்பு நிலை காலசர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறது. இது உங்கள் வேலையில் தடைகளை உருவாக்குகிறது. வெற்றி பெறுவது கடினம். அத்தகைய சூழ்நிலையில், வைஷாக அமாவாசை நாளில், நீங்கள் காலசர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். வைஷாக அமாவாசை அன்று நீராடிய பின் தங்க நாகத்தை வணங்குங்கள். இது தவிர அமைதிக்காக சிவபெருமானை வழிபட வேண்டும். சிவன் அருளால் காலசர்ப்ப தோஷம் நீங்கும்.

சர்வார்த்த சித்தி யோகம் 

வைஷாக அமாவாசை அன்று காலை 05:51 மணி முதல் சர்வார்த்த சித்தி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தில் செய்த காரியங்கள் வெற்றியடையும். உங்கள் நடவடிக்கைகள் இந்த குறைபாடுகளை அகற்றும்.

மேலும் படிக்க | கிருஷ்ண பக்ஷ அமாவாசையில் வரும் சூரிய கிரகணம்...! 3 ராசிகளுக்கு இருக்கும் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News