குரங்கை சங்கிலியால் கட்டி நைட் கிளப்பில் செய்த செயல்: திடுக்கிடும் வைரல் வீடியோ

இந்த விவகாரத்தை பிரபல பெங்காலி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 20, 2023, 12:27 PM IST
  • பாம்பை சித்திரவதை செய்த வைரல் வீடியோ.
  • இன்றைய வைரல் வீடியோ.
குரங்கை சங்கிலியால் கட்டி நைட் கிளப்பில் செய்த செயல்: திடுக்கிடும் வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். அந்தவகையில் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல இரவு விடுதியான டாய் ரூம், விலங்கு பிரியர்கள் மற்றும் இணையவாசிகளின் கோபத்தை சந்தித்துள்ளது. உண்மையில், நைட் கிளப் வளாகத்தில் ஒரு குரங்கு சங்கிலியால் கட்டப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த கொடூர சம்பவத்தை பிரபல பெங்காலி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Viral Video: இனி வீட்டை விட்டு போவியா... பூனை குட்டியை பின்னி பெடலெடுத்த தாய் பூனை!

குரங்கை கொடுப்படுத்தும் வீடியோவை இங்கே காணுங்கள்:

இருப்பினும், இரவு விடுதி வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்த சில குரங்கு பயிற்சியாளர்கள் தங்களை அணுகியதாக இரவு கிளப் அதிகாரிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். மறுத்ததால், நைட் கிளப் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் தரை தளத்திற்கு சென்று அங்கு குரங்கு விளையாட்டை காட்டினார். அவர் தனது குரங்கை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்.

பிறரைப் பற்றி நாம் எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அதே அளவுக்கு விலங்குகள் மீதும் அக்கறை கொள்கிறோம். அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது கூண்டுகளில் அடைத்து வைக்கப்படும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம். தெரியாமல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோவை சமூக வலைதளவாசிகளும் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மரத்தில் தொங்கிய படி நடனமாடிய விஷ பாம்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News