வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சூப்பர் செய்தி: 7 நாடுகளில் ஐஐடி தொடங்க திட்டம்

IITs in Other Countries: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஐஐடி வளாகங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் ஐஐடி வளாகங்களை விரிவுபடுத்துவது குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 23, 2022, 05:20 PM IST
  • உலக நாடுகளில் அடி எடுத்து வைக்கும் ஐஐடி.
  • ஐஐடி-கள் நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாகும்.
  • ஐஐடி-களுக்கு வெளிநாட்டு வளாகங்களை அமைப்பதற்கான 5-ஸ்டெப் திட்டத்தை கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சூப்பர் செய்தி: 7 நாடுகளில் ஐஐடி தொடங்க திட்டம் title=

உலக நாடுகளில் அடி எடுத்து வைக்கும் ஐஐடி: ஐஐடி-கள் நாட்டின் முதன்மையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களாகும். இவை மற்ற உலக நாடுகளிலும் அடி எடுத்து வைக்க தயாராகி வருகின்றன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஐஐடி வளாகங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சமீபத்திய புதுப்பிப்பின்படி, வெளிநாடுகளில் ஐஐடி வளாகங்களை விரிவுபடுத்துவது குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்தியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்று பெயரிடப்படவிருக்கும் இந்த கல்வி நிறுவனங்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியைத் தொடரக்கூடிய உலகளாவிய வளாகங்களைக் கொண்டிருக்கும். ஐஐடி-களுக்கு வெளிநாட்டு வளாகங்களை அமைப்பதற்கான 5-ஸ்டெப் திட்டத்தை கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அந்த திட்டத்தின் அம்சங்கள் பின்வருமாறு:

- இருப்பிடத்தின் பிரிவு மற்றும் வழிகாட்டி HEI

- வளாக தளங்களின் தேர்வு

- கல்வித் திட்டங்களின் தேர்வு

- ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு

- அவுட்ரீச், மற்றும் சீட் ஃபண்டு திரட்டுதல்.

மேலும் படிக்க | NRI நினைவில் கொள்ளவேண்டிய இந்திய வருமான வரி விதிகள் 

17 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்தது

ஐஐடி-களுக்கான உலகளாவிய வளாகங்களை அமைப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த, மத்திய அரசு 17 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இது செயல்முறையை எளிதாக்குகிறது. ஐஐடி கவுன்சில் நிலைக்குழு தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு, ஐஐடிகளின் வெளிநாட்டு வளாகங்களை அமைப்பதற்கான பரிந்துரையை பகிர்ந்து கொண்டது. குழு, இதுவரை, ஐஐடிகளின் வெளிநாட்டு வளாகங்களை உருவாக்கக்கூடிய இடங்கள் மற்றும் நாடுகளை அடையாளம் காண வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் ஆலோசனை நடத்தியது.

ஊடக அறிக்கையின்படி, யுகே, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளில் ஐஐடி வளாகங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை குழு அடையாளம் கண்டுள்ளது. புதிய வளாகங்களை அமைப்பதற்காக இந்த நாடுகளை குழு அடையாளம் கண்டுள்ளது. ஏனெனில் அவை பின்வரும் அளவுருக்களை பூர்த்தி செய்கின்றன:

- ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு

- கல்வி பரம்பரை

- தரமான ஆசிரியர்களையும் மாணவர்களையும் கவர உகந்த சூழல் அமைப்பு

- ஒழுங்குமுறை விதிகள்

- இந்தியாவின் "பிராண்டிங் மற்றும் உறவை" மேம்படுத்துவதற்கான சாத்தியமான கூறுகள். 

ஐஐடிகளின் உலகளாவிய வளாகங்களை அமைப்பதற்கான '6 உறுதியான முன்மொழிவுகளை' இங்கிலாந்து ஹை கமிஷன் பெற்றுள்ளதாகவும் குழு பகிர்ந்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 6 பல்கலைக்கழகங்கள், அதாவது, பர்மிங்காம் பல்கலைக்கழகம், கிங்ஸ் கல்லூரி லண்டன், எக்ஸிடெர் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக கல்லூரி லண்டன் ஆகியவை ஐஐடியின் வெளிநாட்டு வளாகத்தை அமைப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு வளாகத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தால் அணுகப்பட்ட பின்னர், ஐஐடி டெல்லி ஏற்கனவே அபுதாபியில் உள்ள கல்வி மற்றும் அறிவுத் துறையுடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. இது தவிர, ஐஐடி மெட்ராஸ், இலங்கை, நேபாளம் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளுடனும் உலகளாவிய வளாகத்தை அமைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஐஐடி-களின் உலகளாவிய வளாகங்கள் எவ்வாறு செயல்படும்?

இந்தியாவில் உயர்கல்வி என்று வரும்போது, ​​ஐஐடிகள் தொடக்கத்திலிருந்தே மணிமகுடமாக இருந்து வருகின்றன. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பல அறிஞர்களை உருவாக்கியுள்ளது. மேலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் களங்களில் திருப்புமுனையாக அமைந்த மேம்பாடுகளை உருவாக்கியுள்ளது. இது வெளிநாடுகளில் இந்திய உயர்கல்விக்கான சிறந்த பிராண்டாக அமைகிறது. 

செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு, ஐஐடிகளின் வெளிநாட்டு வளாகங்கள் தொடர்பாக சில முக்கிய பரிந்துரைகளையும் செய்துள்ளது. இந்தியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை குடியிருப்பு கல்வி நிறுவனங்களாக உருவாக்க வேண்டும் என்றும், தங்கள் நாட்டிற்குள் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான ஏற்பாட்டை அந்தந்த நாட்டின் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மாணவர் சேர்க்கையின் அடிப்படையில், ஐஐடி-களின் உலகளாவிய வளாகம் இந்திய மாணவர்களின் முக்கிய பங்களிப்போடு அந்தந்த நாட்டின் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. ஐஐடிகளின் உலகளாவிய வளாகங்களில் இந்திய மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 20% மட்டுமே இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைக்கிறது.

மேலும் படிக்க | கனடா மாணவர் விசா குறித்து பலரும் அறிந்திராத ‘ஒரு’ தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News