கொரோனா வைரஸ் தொற்று இருந்தும் மருத்துவமனையில் சேர்க்கப்பட வில்லை.. காரணம் சொல்லும் Olga Kurylenko

ஜேம்ஸ் பாண்ட் நட்சத்திரம் ஓல்கா குர்லென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வில்லை.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 17, 2020, 11:33 PM IST
கொரோனா வைரஸ் தொற்று இருந்தும் மருத்துவமனையில் சேர்க்கப்பட வில்லை.. காரணம் சொல்லும் Olga Kurylenko title=

புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு ஒரு நாள் கழித்து, ஜேம்ஸ் பாண்ட் நட்சத்திரம் ஓல்கா குர்லென்கோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விரிவான இடுகையைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். "எனக்கு வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அனைவரின் தயவிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

கொரோனா வைரஸ் தொடர்பாக என்னிடம் கேட்கப்பட்ட பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்பினேன்" என்று 40 வயதான நடிகை குறிப்பிட்டுள்ளார். 

அவர் அளித்த பதிவில், எனக்கு கொரோனோ இருப்பது உண்மை தான். ஆனால் தற்போது மருத்துவமனையில் இல்லை. ஏனெனில் அங்கு பலர் நிரம்பியுள்ளனர். மேலும் அந்த மருத்துவமனையில், அதிக அளவில் பாதிக்கப்பட்டு வாழ்க்கைக்காக போராடும் நோயாளிகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்பதையும் தெளிவுப்படுத்தினார்.

மேலும் எனக்கு அதிக அளவில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் கால் பண்ணுங்கள்.. உங்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக கூறியுள்ளார்.

ஓல்கா குர்லென்கோ தனது இடுகையில், "எங்கு, எப்படி சோதனை செய்யப்பட்டார் என்பதைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார். ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றபோது என் காய்ச்சல் 39 பாரன்ஹீட் ஆக இருந்தது. அவர்கள் என் தொண்டையில் ஒரு துணியை வைத்து பரிசோதனை செய்தனர். ஒரு வாரமாக எனது பாரன்ஹீட் நிலையானதாக இருந்தது 38. சில நேரங்களில் 38.5 வரை இருந்தது. இன்று இன்னும் கீழே வந்துவிட்டது எனக் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை திங்களன்றும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர், "கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்தபின் வீட்டில் நான் பூட்டப்பட்டேன். உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன் கிட்டத்தட்ட ஒரு வாரம். காய்ச்சல் மற்றும் சோர்வு என் முக்கிய அறிகுறிகள். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்" எனக் பதிவிட்டு இருந்தார்.

கடந்த ஆண்டு வுஹானில் (சீனா) தோன்றிய கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 137 பேருக்கு COVID - 19 தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டு உள்ளன. தொற்றுநோய் காரணமாக பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களின் வெளியீடுகள் காலவரையின்றி மாற்றப்பட்டுள்ளன.

Trending News