தனுஷின் 'D50' படத்தில் இணைந்த இரு டாப் பிரபலங்கள்

Dhanush D50 Update: தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள தனுஷின் 50 வது படமான ‘D50’ திரைப்படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 24, 2023, 10:48 AM IST
  • தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார்.
  • துஷாரா விஜயன் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
  • இந்த படம் கேங்ஸ்டர் நாடகமாக உருவாக உள்ளது.
தனுஷின் 'D50' படத்தில் இணைந்த இரு டாப் பிரபலங்கள் title=

தனுஷ் டி50 படத்தின் முக்கிய அப்டேட்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. 

இதற்கிடையில் தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக 'D 50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

மேலும் படிக்க | பல கோடிகளுக்கு அதிபதி... ஆனாலும் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறவில்லையா? - முழு விவரம்

இந்த நிலையில் தற்போது தற்போது இந்த படத்தில் திரைப்படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து உள்ளதாகவும் இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதில் பிரபல இசையமைப்பாளர் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷான் ஆகிய இருவரும் இணைந்து உள்ளதாகவும் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த படம் கேங்ஸ்டர் நாடகமாக உருவாக உள்ளது.

இந்த படத்திற்காக வடசென்னை பின்னணியை கொண்ட செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனுஷ் இந்த படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் தனுஷ் ’பா பாண்டி’ திரைப்படத்தை இயக்கினார், அத்துடன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அடுத்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாக பணிகளில் பிசியாக இருக்கும் வெற்றிமாறன், வாடிவாசல் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷை வைத்து இயக்க உள்ளார்.  ஏற்கனவே, தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இதுமட்டும் இல்லாமல், பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இலான் இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நடிகர் சூர்யா & கார்த்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News