ஏமாத்த ஒன்னும் இல்ல சேரி மக்கள்னா கெட்ட வார்த்தைதான் - பவி டீச்சரின் சர்ச்சை பேச்சு

சேரி மக்கள் என்றாலே கெட்ட வார்த்தைதான் பேசுவார்கள் என்று இரவின் நிழல் நடிகை பிரிகிடா பேசியது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 17, 2022, 03:19 PM IST
  • இரவின் நிழல் படம் ஜூலை 15ஆம் தேதி வெளியானது
  • சிங்கிள் ஷாட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது
  • படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
ஏமாத்த ஒன்னும் இல்ல சேரி மக்கள்னா கெட்ட வார்த்தைதான் - பவி டீச்சரின் சர்ச்சை பேச்சு title=

கோலிவுட்டில் இன்னமும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காத இயக்குநர்களில் பார்த்திபன் ஒருவர். தனது முதல் படமான புதிய பாதை படத்திலேயே தனி முத்திரையை பதித்துவிட்டார். தொடர்ந்து அவர் எடுத்த ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவை.

சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கதையே இல்லாமல் அந்தப் படத்தை இயக்கிய அவர் ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார்.

மேலும் படிக்க | இதற்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன் - பவி டீச்சர் ஓபன் டாக்

இதனையடுத்து ஒரே ஒரு கதாபாத்திரத்தை திரையில் உலாவி விட்டு ஒத்த செருப்பு படத்தை இயக்கினார். இந்தப் படம் பரவலான வரவேற்பை பெற்று தேசிய விருதையும் வென்றது.

Iravin Nizhal

இந்தப் படத்துக்கு அடுத்ததாக அவர் சிங்கிள் ஷாட்டில் இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமித்திருக்கும் இப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியானது. நல்ல முயற்சி என்ற பெயரை இப்படம் பெற்றாலும் பெரிதாக கவரவில்லை என்பதே ரசிகர்களின் கமெண்ட்டாக இருக்கிறது.

இரவின் நிழலில் நடித்திருக்கும் பிரிகிடா ஆஹா கல்யாணம் வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர். இவர் இப்படத்தில் நிர்வாணமாக நடித்ததும், அவர் அதுகுறித்து விளக்கமளித்ததும் பேசுபொருளானது.

Iravin Nizhal

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் இரவின் நிழல் படம் குறித்து பேசிய பிரிகிடா, “இந்தக் கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு சேரிக்கு போனோமென்றால் நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாத்த முடியாது” என்றார்.

மேலும் படிக்க | சன்னி லியோனின் சவாலை ஏற்ற ஸ்ருதிஹாசன்...வைரலாகும் வீடியோ!

அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், சேரி மக்கள் என்று இங்கு யாரும் தனியாக இல்லை. மனிதர்கள் அனைவருமே கெட்ட வார்த்தை பேசுவார்கள். இதில் சேரி மக்கள் என்று தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News