சனிப்பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும்

Sani Peyarchi 2022: சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கப்போகும் அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2022, 12:52 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
  • நிதித் தடைகள் நீங்கி, பணம் சம்பாதித்து சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
  • சனியின் இந்த சஞ்சாரம் கன்னி ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.
சனிப்பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும் title=

ஜோதிட சாஸ்திரப்படி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சனி பகவான் ஒரு அற்புதமான நிகழ்வு ஒன்றை நிகழ்த்தப்போகிறார். கர்மவினைகளின் அதிபதியான சன் பாவான் ஏப்ரல் 29 ஆம் தேதி ராசி மாறுகிறார். 

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான மகர ராசியில் இருந்து தனது இரண்டாவது ராசியான கும்பத்தில் பிரவேசிக்கப் போகிறார். சனியின் இந்த ராசி மாற்றம் சனியின் தாக்கத்தின் கீழ் இருக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிறப்பானதாக இருக்கும். 

சனியின் இந்த சஞ்சாரத்தால், சனிபகவானின் சிறப்பு அருள் சில ராசிக்காரர்கள் மீது அதிகமாக பொழியப்போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் அருளால் செல்வமும், தொழிலில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும். சனிபகவான் சிறப்பு அருள் புரியும் அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். சனிபகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். செல்வச் செழிப்பும், வாழ்வில் முன்னேற்றமும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக வெற்றியை அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவடையும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை பெழியும்

சிம்மம்
இந்த சனிப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சனிபகவானின் கோபத்தால் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்களுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்படும். இதனுடன், நிதித் தடைகளும் நீங்கி, பணம் சம்பாதித்து சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த சஞ்சாரத்தின் போது நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

கன்னி 
சனியின் இந்த சஞ்சாரம் கன்னி ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். சனி பெயர்ச்சி காலத்தில் நிதி ரீதியாக வலுவாக இருப்பதுடன், சமூக கௌரவத்தையும் பெறுவீர்கள். பல்வேறு துறைகளில் இருந்து பண ஆதாயம் உண்டாகும். 

இது தவிர, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கப்படும். சனிபகவானின் அருளால் அதிர்ஷ்டமும் துணை நிற்கும். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக இது இருக்கும்.

தனுசு 
சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரவுள்ளது. இந்த நேரத்தில், உங்கள் பணித் துறையில் மிகப்பெரிய வெற்றியை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. வாழ்வில் உள்ள துன்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். கடன் சுமையையும் குறையலாம். நிதி ஆதாயத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சுபச்செயலும் நடக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் வாழ்வில் ஒளி வீசும், மகிழ்ச்சி பொங்கும்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News