இறந்த மனிதரின் கால் விரல்களை திருடிய நபர் கைது!

இறந்த மனிதரின் உடலில் இருந்து கால்விரல்கள் இரண்டினை வெட்டி எடுத்த ஹெரால்ட் மனிதர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Jun 18, 2018, 07:15 PM IST
இறந்த மனிதரின் கால் விரல்களை திருடிய நபர் கைது! title=

இறந்த மனிதரின் உடலில் இருந்து கால்விரல்கள் இரண்டினை வெட்டி எடுத்த ஹெரால்ட் மனிதர் கைது செய்யப்பட்டுள்ளார்!

மனித உடல்களை பதப்படுத்தி காட்சிப்படுத்தப்படும் மனித உடல் கண்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்த இறந்த நபரின் உடலில் இருந்து 11,000 டாலர் மதிப்புள்ள மனித உடல் விரல்கள் இரண்டினை திருடிய 28-வயது ஹெரால்ட் மனிதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்நபரினை NZ ஹெரால்ட்-ன் அக்குலாந்த் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரை மீண்டும் நியூசிலாந்தின் வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளளது.

வெட்டப்பட்ட கால் விரல்கள் முதல் முறையாக ஆக்லாண்டில் ஒரு பயண கண்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியானது 1997-ஆம் ஆண்டு டாக்டர் ஏஞ்சினாலி வால்லி மற்றும் டாக்டர் கன்டர் வோன் ஹாகென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 17,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த கண்காட்சிக்காக தங்களது உடல்களை கொடையளிக்க ஆரம்பத்தினர்.

மனித உடல்களை பதப்படுத்தும், பாதுகாக்க உதவும் ப்ளாஸ்டினேஷன் எனப்படும் திரவியத்தினை டாக்டர் வோன் ஹாகென்ஸ் கண்டுப்பிடித்தார். இந்த திரவியத்தின் மூலமும் வைட்டல் எடிட்டிங் மூலமும், இந்த உடல்களை நன்கு ஆய்வு செய்ய மற்றும் மனித உடற்கூறலை ஆய்வு செய்ய இயலுகிறது என மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

Trending News