மூத்த குடிமக்களுக்கு அதிக லாபத்தை தரும் 2 வங்கிகள்... முழு விவரம்!

Senior Citizen FD Interest: மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை பல வங்கிகள் உயர்த்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட இந்த இரண்டு வங்கிகள் அதைவிட அதிக வட்டியை வழங்குகின்றன. அதுகுறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 15, 2023, 07:48 PM IST
  • எதிர்காலத்தில் ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை மீண்டும் உயர்த்தினால் வட்டி விகிதம் உயர்வு.
  • மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் 9.5 சதவீதத்தை தாண்டியுள்ளது.
  • வங்கியில் உங்கள் டெபாசிட் ரூ.5 லட்சம் வரை மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்.
மூத்த குடிமக்களுக்கு அதிக லாபத்தை தரும் 2 வங்கிகள்... முழு விவரம்! title=

Senior Citizen FD Interest: நிலையான வைப்புத்தொகையில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் 9.5 சதவீதத்தை தாண்டியுள்ளது. அந்த வகையில், இரண்டு சிறிய நிதி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 9.5% அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன. மற்றவர்களுக்கு 9% அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன.

இந்த வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்தன

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SSFB) 2 கோடிக்கும் குறைவான மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கான FD விகிதத்தை 5 ஆண்டுகளுக்கு 9.6 சதவீதமாக உயர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 

பொதுவான வாடிக்கையாளர்களுக்கு, இந்த வங்கி 9.1 சதவீத வட்டி தருகிறது. யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் (USFB) மூத்த குடிமக்களுக்கு 9.5 சதவிகிதம் வரையிலும் மற்றவர்களுக்கு 9 சதவிகிதம் வரையிலும் 2 கோடி ரூபாய்க்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கு திட்டங்களை வழங்குகிறது. இது தவிர, எஸ்பிஐ 7.6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது, ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கி 7.95 சதவீதம் வரை வட்டியும், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி 8.25 சதவீதம் வரை வட்டியும் செலுத்துகிறது.

மேலும் படிக்க | நகை கடன் வாங்க போறீங்களா... ‘இந்த’ தப்பை செஞ்சுடாதீங்க!

5 லட்சம் வரையிலான தொகை மட்டுமே பாதுகாக்கப்படுகிறது

வங்கிகளின் நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன, மேலும் அவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை மீண்டும் உயர்த்தினால், மூத்த குடிமக்கள் மற்றும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிக கட்டணத்தில் FD திட்டங்களை பதிவு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாகும். FD-கள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சந்தையுடன் இணைக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன், ரிசர்வ் வங்கியின் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (DICGC) விதிமுறைகளின் கீழ் ரூ. 5 லட்சம் வரை மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, வங்கி திவால் ஆனால், வங்கியில் உங்கள் டெபாசிட் ரூ.5 லட்சம் வரை மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

5 லட்ச ரூபாய் வரம்பில் வட்டி மற்றும் அசல் தொகையும் அடங்கும். வங்கி திவால் ஆனால், வங்கிகள் 90 நாட்களுக்குள் டெபாசிட் செய்பவர்களுக்கு பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும். தற்போது அதிக வைப்புத்தொகை திட்டங்களுக்கான விகிதங்களின் பலன்களைப் பெறவும், உத்தரவாதமான வருமானத்தைப் பெறவும், மூத்த குடிமக்கள் மற்றும் பிறர் அந்தத் தொகையை மட்டும் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இல்லாத வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். அதிக தொகையை டெபாசிட் செய்ய, வாடிக்கையாளர் பாதுகாப்பாக இருக்க பல்வேறு வங்கிகளில் பல FD கணக்குகளை திறக்கலாம்.

மேலும் படிக்க | World Family Day: கொஞ்சம் தியாகம்-நிறைய ஆனந்தம்..குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News