7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி, இனி இந்த தொகையும் சம்பளத்தில் சேரும்

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை (CEA) கோர முடியாத ஊழியர்கள் இப்போது அதை கோரலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2021, 01:56 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • CEA கோர முடியாத ஊழியர்கள் இப்போது அதை கோரலாம்.
  • இதற்கு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களும் தேவைப்படாது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி, இனி இந்த தொகையும் சம்பளத்தில் சேரும்  title=

7th Pay Commission: கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை (CEA) கோர முடியாத ஊழியர்கள் இப்போது அதை கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்கு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களும் தேவைப்படாது.

கொரோனா காரணமாக CEA ஐ கோர முடியவில்லை

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையைப் பெறுகிறார்கள். இது 7 வது ஊதியக் குழுவின்  (7th Pay Commission) பரிந்துரைகளின்படி மாதம் ரூ .2,250 ஆகும். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களால் CEA ஐ கோர முடியவில்லை.

அரசு ஊழியர்கள் செல்ஃப் டிக்லரேஷன் அளிக்க வேண்டும்

ஜூலை மாதத்தில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஆஃபிஸ் ஆஃப் மெமோராண்டத்தை (OM) வெளியிட்டது. கொரோனா காரணமாக, மத்திய பணியாளர்கள், குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக அதில் கூறப்பட்டது. ஏனெனில், கட்டணங்களை ஆன்லைனில் டெபாசிட் செய்த பிறகும், பள்ளியில் இருந்து எஸ்எம்எஸ்/இ-மெயில் மூலம் தேர்வு முடிவு / ரிபோர்ட் கார்டுகள் ஆகியவை அனுப்பப்படவில்லை.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம், குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பில் மாற்றம்

CEA கிளெய்மை, Self declaration அல்லது, தேர்வு முடிவு / ரிப்போர்ட் கார்ட் / கட்டண செலுத்துதல் ஆகியவற்றின் எஸ்எம்எஸ்/மின்-அஞ்சல் ஆகியவற்றின் பிரிண்ட் அவுட் மூலமும் கிளெயிம் செய்து கொள்ளலாம் என DoPT கூறியுள்ளது. இருப்பினும், இந்த வசதி மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 இல் முடிவடையும் கல்வி ஆண்டுக்கு மட்டுமே கிடைக்கும்.

எவ்வளவு தொகை கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) இரண்டு குழந்தைகளின் கல்விக்கு, குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெறுகிறார்கள். ஒரு குழந்தைக்கு இந்த உதவித்தொகை மாதம் ரூ. 2250 ஆகும். அதாவது ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4500 கிடைக்கும்.

இருப்பினும், இரண்டாவது குழந்தை இரட்டை குழந்தையாக இருந்தால், இந்த உதவித்தொகை முதல் குழந்தையுடன் இரட்டைக் குழந்தைகளின் கல்விக்காகவும் வழங்கப்படுகிறது. இரண்டு கல்வி ஆண்டுகளின் படி, ஒரு குழந்தைக்கு ரூ. 4500 அளிக்கப்படும். மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 க்கு ஒரு ஊழியர் இன்னும் தொகையை கோரவில்லை என்றால், அதை இப்போது கோரலாம். அப்படி கோரிய பிறகு, அவரது சம்பளத்தில் ரூ .4500 சேர்க்கப்படும்.

CEA கோர எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன

குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற, மத்திய ஊழியர்கள் பள்ளி சான்றிதழ் மற்றும் கிளெயிம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியிலிருந்து பெறப்பட்ட டிக்லரேஷனில், ஊழியரின் குழந்தைகள் அவர்களது கல்வி நிறுவனத்தில் படிக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்க வெண்டும். இதனுடன், குழந்தைகள் படித்த கல்வியாண்டின் விவரமும் இருக்க வேண்டும்.

CEA கிளெயிம் செய்ய, குழந்தைகளின் ரிப்பேர்ட் கார்ட், சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் பம்பர் செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News