திருவள்ளூர் வங்கியில் கொள்ளை: ஊழியர் உட்பட 3 பேர் கைது!

திருவள்ளூர் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நேற்று கொள்ளையடித்தவர்களை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Last Updated : May 29, 2018, 11:35 AM IST
திருவள்ளூர் வங்கியில் கொள்ளை: ஊழியர் உட்பட 3 பேர் கைது! title=

திருவள்ளூர் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நேற்று கொள்ளையடித்தவர்களை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஒன்று செய்யப்பட்டு வருகிறது. நேற்று இந்த வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் விடுமுறை தினத்தை அடுத்து நேற்று வங்கி திறக்கப்பட்ட போது வங்கியில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டும், கள்ளச் சாவிகள் போட்டும் திறக்கப்பட்டிருந்தது. இதை கண்ட வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கியின் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 32 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.

Trending News