மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்க உபி அரசு ஒப்புதல்...

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்க ஒப்புதல் அளித்தது. 

Last Updated : Dec 9, 2019, 04:26 PM IST
மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்க உபி அரசு ஒப்புதல்... title=

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்க ஒப்புதல் அளித்தது. 

உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரபிரதேச அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் அயோத்தி, கோரக்பூர், பிரோசாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களின் மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அயோத்தி மாவட்டத்தில் 41 கிராமங்களை உள்ளடக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இது தவிர, மாநிலத்தில் 16 புதிய நகர் பஞ்சாயத்துகள், நான்கு நகர் பஞ்சாயத்துகள் மற்றும் ஒரு நகர பாலிகா பரிஷத் ஆகியவற்றை உருவாக்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஷாஜகான்பூரில் பண்டா, பஹ்ரைச்சில் பயாக்பூர், இட்வா, பரத்பரி மற்றும் சித்தார்த்நகரில் பதானிச்சாபா, படாயூனில் தாகவன், கான்பூர் தேஹாட்டில் கர்பா முசனகர், ஜலாவுனில் உள்ள சவுமுகா, கோரக்பூரில் உள்ள சௌமுகா, லோகன் தாகன் பாகர் , பஸ்தியில் கெய்காட், பாரூகாபாத்தில் நவாப்கஞ்ச், பிரோசாபாத்தில் உள்ள மகன்பூர் ஆகியவை இன்று புதிய நகர் பஞ்சாயத்துகளாக அமைச்சரவை ஒப்புதல் பெற்றன.

இதேபோல், குஷினகரில் நகர் பாலிகா பரிஷத் பத்ரௌனா, அஜம்கரில் அஜ்மத்கர், பராபங்கியில் பாங்கி, லலித்பூரில் மகாராணி, பாஸ்தியில் பாபனன் உள்ளிட்ட பல நகர் பஞ்சாயத்துகளின் வரம்புகளை நீட்டிக்கும் திட்டத்தையும் அமைச்சரவைக் கூட்டம் நிறைவேற்றியது.

அதேவேளையில்., பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டவற்றுடன் கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்காக 218 விரைவான நீதிமன்றங்களை நிறுவுவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு உத்தரபிரதேச அமைச்சரவைக் கூட்டம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதன்படி, பாலியல் பலாத்கார வழக்குகளை மட்டும் விசாரிக்க 144 நீதிமன்றங்கள் செயல்படும். 74 நீதிமன்றங்கள் போஸ்கோ(POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைப் பார்க்கும். ஒவ்வொரு நீதிமன்றத்தையும் நிர்மாணிக்க மாநில அரசு ரூ.75 லட்சத்தை தனது மானியமாக அளிக்கும்.

மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 25,749 கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன, அதே நேரத்தில் குழந்தை குற்றங்கள் தொடர்பான 42,379 வழக்குகள் மிகப்பெரிய மாநிலத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தற்போது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய உன்னாவ் கற்பழிப்பு வழக்கை அடுத்து உத்திர பிரதேச அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. பல்லியா இணைப்பு அதிவேக நெடுஞ்சாலை திட்ட மேம்பாடு மற்றும் பூர்வஞ்சல் அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை பல்லியாவுடன் இணைப்பதற்கான DPR தொடர்பாக முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.

2. விதிகளின் கீழ் SGST-அக VAT நன்மைகளை வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட தொழில்துறை முதலீட்டு ஊக்குவிப்பு விதிகள் -2003-ல் திருத்தம்.

3. யூத விமான நிலையத்திற்கான டெவலப்பரைத் தேர்ந்தெடுப்பதற்கான திட்டம் நிறைவேற்றப்பட்டது.

4. லக்னோ உயர்நீதிமன்றத்தின் போக்குவரத்து விருந்தினர் மாளிகையை நவீனமயமாக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

5. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, 29 இனங்கள் கொண்ட மரங்களை வெட்டுவதற்கு முன் ஒப்புதல் உறுதிபடுத்தப்பட்டது. இதனிபடி ஒரு மரத்தை வெட்டுவதற்கு, 10 மரங்களை நடவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

Trending News