Same Sex Marriage: மத்திய அரசையும் மீறி சட்டப்பூர்வமாகுமா தன்பாலின திருமணம்?

Same Sex Marriage In India: தன்பாலின திருமணத்திற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்த முழு தகவலையும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 12, 2023, 06:47 PM IST
  • தன்பாலின காதலை 2018இல் உச்சநீதிமன்றம் குற்றமற்றதாக அறிவித்தது.
  • நாளை தன்பாலின திருமணம் குறித்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
Same Sex Marriage: மத்திய அரசையும் மீறி சட்டப்பூர்வமாகுமா தன்பாலின திருமணம்? title=

Same Sex Marriage In India: இந்தியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்றும், தாய், தந்தை என இயற்கையான முறையில் இருந்து முற்றிலும் விலகியிருப்பதாகவும் கூறி, அதை ஏற்க கூடாது என பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றுசேர்த்து, உச்ச நீதிமன்றம் நாளை (மார்ச் 13) விசாரணை மேற்கொள்ள உள்ளது. 

இதுகுறித்த இறுதி தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், விளிம்புநிலை மக்களுக்கான LGBTQ+ சமூக மக்களின் உரிமைசார்ந்து இதுவரை இந்தியா எடுத்துள்ள முன்னெடுப்புகளை சற்று பின்னோக்கி பார்க்கலாம். 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

2018ஆம் ஆண்டில் தன்பாலின காதல் என்பது குற்றமற்றது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அளித்தது. இது, LGBTQ+ சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் 7ஆம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனை சட்டத்தின் 377ஆவது சட்டப்பிரிவை நீக்கி, இந்தியாவில் தன்பாலின காதல் குற்றமற்றது என உறுதிப்படுத்தியது.

இருப்பினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் இப்போதுவரை சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. இது சட்டப்பூர்வமாகாமல் இருப்பதற்கு, மதம் மற்றும் அரசின் குறுக்கீடுகளும், எதிர்ப்புகளும்தான் காரணம் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடி அரசின் நிலைப்பாடு

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தன்பாலின திருமணம் என்பது "இந்திய குடும்ப அமைப்பு" என்ற கருத்துடன் ஒத்துப்போகாது. இந்திய குடும்ப அமைப்பு என்பது "கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது" என்று கூறியது. ஒரு உயிரியல் ஆணை 'கணவன்' என்றும், ஒரு உயிரியல் பெண்ணை 'மனைவி' என்றும், இருவருக்குமிடையே உள்ள இணைப்பால் பிறக்கும் குழந்தைகள் - உயிரியல் ஆணால் தந்தையாகவும், உயிரியல் பெண்ணை தாயாகவும் வளர்க்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரசாங்கத்திற்கு பதற்றத்தை அதிகரித்த H3N2! மக்களுக்கு மிகுந்த எச்சரிக்கை

தன்பாலின திருமணத்தின் சட்ட நிலை

இந்தியாவில் திருமணங்கள் கண்டிப்பாக வேற்று பாலின ஜோடிகளை மட்டுமே அங்கீகரிக்கின்றன. அதாவது, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண். இந்தியாவின் பல மதக் குழுக்களால் வடிவமைக்கப்பட்ட, இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவ திருமணச் சட்டம், இஸ்லாமிய திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்திய திருமணச் சட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை எதுவுமே ஒரே பாலினத்தவர்களுக்கிடையேயான திருமணத்தை அங்கீகரித்தவை அல்ல.

LGBTQ+ சமூகத்தினரின் சட்ட உரிமைகள் நீண்ட காலமாக இந்தியாவில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. 2018ஆம் ஆண்டில், தன்பாலின காதலை குற்றம் என கூறிய காலனித்துவ கால கொடூரமான சட்டத்தை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்தது மட்டும்தான் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், LGBTQ+ சமூகத்தினர் இந்தியாவில் தங்களின் சம உரிமைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசியலமைப்பின் கீழ் அவர்களின் உரிமைகளின் விரிவாக்கம் உச்ச நீதிமன்றத்தால் வழிநடத்தப்பட்டது. இதன் மூலம், உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தன்பாலின திருமணத்தை விரைவில் சட்டப்பூர்வமாக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. அதாவது, மத்திய அரசின் பரிந்துரையை மீறி உச்ச நீதிமன்றம் அதை சட்டப்பூர்வமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Timeline: இந்திாயவில் தன்பாலின திருமணம் 

- 2014ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆண், பெண் அல்லதாவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு "மூன்றாம் பாலினமாக" சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பெரும் அடித்தளத்தை அமைத்தது.

- 2017இல், அது தனியுரிமைக்கான உரிமையை வலுப்படுத்தியது. மேலும் பாலியல் கண்டறிதலை ஒரு தனிநபரின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தின் இன்றியமையாத பண்பாக அங்கீகரித்தது.

- 2018ஆம் ஆண்டில், தன்பாலின காதலை குற்றமற்றதாக்கியது. பிரிட்டிஷ் காலனித்துவ காலச் சட்டத்தை ரத்து செய்தது. LGBTQ+ சமூக மக்களுக்கான அரசியலமைப்பு உரிமைகளை விரிவுபடுத்தியது.

- 2022இல், உச்ச நீதிமன்றம் "வித்தியாசமான" குடும்பங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பரந்த வகையாகும். எடுத்துக்காட்டாக, ஒற்றைப் பெற்றோர், கலப்பு குடும்பங்கள் அல்லது உறவினர் உறவுகள் - மற்றும் ஒரே பாலின தம்பதிகள். இது பாரம்பரியமற்றது என்று நீதிமன்றம் கூறியது. குடும்பங்களின் வெளிப்பாடுகள் பல்வேறு சமூக நலச் சட்டங்களின் கீழ் பலன்களுக்கு சமமாக தகுதியானவை.

தன்பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக உள்ள நாடுகள்

2022ஆம் ஆண்டின் இறுதியில், உலகெங்கிலும் உள்ள 30 நாடுகளில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருப்பினும், இவை பெரும்பாலும் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நாடுகள்தான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டீனா, கனடா, தைவான், க்யூபா உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாகப்பட்டுள்ளது. 

ஆசியாவில், தன்பாலின திருமணத்தை தைவான் மட்டுமே அனுமதிக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும் ஆசிய புலம்பெயர்ந்த நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கான அணுகுமுறை முரண்படுகிறது.

ஹாங்காங் தங்கள் குடிமக்களின் ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்காது. ஆனால் தங்களின் நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டில் தொழிலாளர்களின் ஒரே பாலின வாழ்க்கைத் துணைவர்களுக்கு சார்பு விசாக்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம், மத்திய அரசு எடுத்த மிகப் பெரிய முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News