பழைய ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்க இறுதி நாள் இதுதான்! காலக்கெடு நிர்ணயம் உண்மையா?

Pension Scheme Last Date: ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யாத தகுதியான பணியாளர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 28, 2023, 09:51 PM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோரி ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் பேரணி
  • பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக பல பேரணிகளும் நடைபெற்று வருகின்றது
  • ஓய்வூதிய திட்டக் கொள்கையில் 2023 ஆகஸ்ட் 31 முக்கிய நாள்
பழைய ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்க இறுதி நாள் இதுதான்! காலக்கெடு நிர்ணயம் உண்மையா? title=

நியூடெல்லி: பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவது குறித்து, நாட்டில் விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில் பழைய ஓய்வூதிய முறை குறித்து பெரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையைத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யவும்
அரசு ஊழியராக இருப்பவர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வுசெய்யலாம். 31 ஆகஸ்ட் 2023 வரை பழைய ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்க அரசு ஊழியருக்கு தெரிவு உள்ளது. இதனுடன், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யாத தகுதியான பணியாளர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய கொள்கை
சத்தீஸ்கரிலும் மாநில அரசு பழைய ஓய்வூதிய கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இது தவிர, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியது.

மேலும் படிக்க | மக்களே உசார்! மார்ச் 31-க்குள் நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது, அரசு ஊழியர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, ​​டிஏவும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தி, ஓய்வூதியத்தை உயர்த்துகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோரி ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் பேரணியில் ஈடுபடவுள்ளனர்.

அரசிடம் இருந்து பதில் வரவில்லை என்றால், அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தைச் சீர்திருத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என்று சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கொரோனா ரிட்டர்ன்ஸ்! மீண்டும் 2020இல் இருந்தது போல வேகமெடுக்கிறது கோவிட் நோய்

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்...மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News