ஜாமியாவில் CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு...

டெல்லியின் ஜாமியாவில் CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர் காயமடைந்தார்!!

Last Updated : Jan 30, 2020, 02:25 PM IST
ஜாமியாவில் CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு... title=

டெல்லியின் ஜாமியாவில் CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர் காயமடைந்தார்!!

டெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக  ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

டெல்லி ஜாமியா நகரில் கடந்த டிசம்பர் 15, 2019 அன்று நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 70 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல்துறையினர் புதன்கிழமை (ஜனவரி 29) வெளியிட்டனர். இந்த சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்களை வழங்கும் எவருக்கும் டெல்லி காவல்துறை வெகுமதி அளிக்கும் என்று குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜாமியா பல்கலை.,யில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த போராட்டத்தின் போது, போராட்டத்தை தூண்டியதாக கவல்துறையினர் சிலரை அடையாளம் கண்டுள்ளனர். மேலுல் இவர்களை விரைவில் பிடிக்க தீவிர பணியில் காவல்துறையினர் ஈட்புபட்டு வருகின்றனர். அந்த வகையில் போராட்டத்தை தூண்டியதாக கருதப்படும் 70 நபர்களில் புகைப்படங்களை டெல்லி காவல்துறையினர் நேற்று  வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், புது தில்லியின் ஜாமியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) போராட்டத்தின் போது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மாணவர் காயமடைந்தார். காயமடைந்த சதாப் என்ற மாணவர் புனித குடும்பத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, அந்த நபர் தனது துப்பாக்கியை அசைத்து எதிர்ப்பாளர்களின் அருகே வந்தார். அவர், "வாருங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருவேன்" என கூறியதாக தெரிவித்தனர். 

முன்னதாக, ஜாமியாவிலிருந்து ராஜ்காட் அணிவகுப்புக்காக மக்கள் ஜாமியாவின் கேட் எண் 7 இல் இருந்துள்ளனர். 

 

Trending News