தேசிய கீதத்தை அவமதித்ததாக மலையாள எழுத்தாளர் கைது

தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்ததாக கேரள எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : Dec 19, 2016, 09:16 AM IST
தேசிய கீதத்தை அவமதித்ததாக மலையாள எழுத்தாளர் கைது title=

கோழிக்கோடு: தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்ததாக கேரள எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் போலீஸ் தகவலின் படி கமல் சி.சவரா என்று அழைக்கபடும் கமல்சி பிராண தேசிய கீதத்தை அவமதித்து பேஸ்புக்கில் கருத்துகளைப் பதிவிட்டதால் கேரள மாநில போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

யுவ மோர்ச்சா என்ற அமைப்பினர் சில நாள்களுக்கு முன்பு கொல்லம் போலீஸில் புகார் அளித்தனர். 

எழுத்தாளர் எதிராக 124 வழக்கு கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கமல் சி.சவாராவை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்தச் சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, எழுந்து நிற்காத 12 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News