கொடூரம்! கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொல்லப்பட்ட மாணவி! கொன்றது யார்? என்ன காரணம்?

Latest News Neha Hiremath : கல்லூரி மாணவி ஒருவர், காதலை மறுத்த காரணத்திற்காக கர்நாடகாவில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Apr 20, 2024, 01:51 PM IST
  • கல்லூரி மாணவன் லவ் டார்ச்சர்
  • கல்லூரி வளாகத்திலேயே கொன்ற கொடூரம்
  • கொன்றது யார்? என்ன காரணம்?
கொடூரம்! கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொல்லப்பட்ட மாணவி! கொன்றது யார்? என்ன காரணம்? title=

Latest News Neha Hiremath : கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி எனும் இடத்தில் ஒரு கல்லூரி மாணவி, தான் பயிலும் கல்லூரியின் வளாகத்திலேயே குத்தி கொலை செய்யப்பட்டிருக்க்கிறார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலையை செய்தது யார், இதன் முழு பின்னணி என்ன? இங்கு பார்க்கலாம். 

உயிரிழந்த கல்லூரி மாணவி!

கர்நாடக மாநிலம் , ஹூப்ளியில் உள்ள பிவிபி எனும் கல்லூரியில் எம்.சி.ஏ முதலாமாண்டு படித்து வந்தவர், நேஹா ஹிரேமத். இவர், நேற்று முன் தினம் (18மார்ச்) அன்று இந்த மாணவி கல்லூரி வளாகத்திலேயே பல முறை குத்தி கொல்லப்பட்டிருக்கிறார். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரிக்கையில் இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து தெரிய வந்திருக்கிறது. 

கொலையாளி யார்?

மாணவி நேஹா, நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்த போது அவர் மீது உடன் படித்த மாணவர் ஃபயாஸ் என்பவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இவருக்கு 23 வயதாகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 3:30 மணியளவில் மாஸ்க் அணிந்து வந்த ஃபயாஸ், நேஹாவை கழுத்திலும் மார்பகத்திலும் மாறி மாறி குத்திவிட்டு தப்பித்திருக்கிறார். இதைப்பார்த்த கல்லூரி மாணவர்கள், நேஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு அவரை பரிசாேதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். ஃபயாஸ், பெலகாவி மாவட்டம், சவாடட்டி எனும் இடத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் எம்.சி.ஏ படிப்பை பாதியிலேயே கை விட்டவர் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

காரணம் என்ன? 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், கொலையான நேஹாவை, ஃபயாஸ் பல நாட்களாக பின் தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்திருக்கிறார். இவரது காதலை ஏற்க நேஹா மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஃபயாஸ், அவர் மீது இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | குஜராத் சாலை விபத்து: அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலி

கையும் களவுமாக பிடித்த போலீஸார்!

நேஹாவை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற ஃபையாஸை, ஹுப்பிள்ளியில் உள்ள வித்யாநகர் பகுதியின் போலீஸாரின் உதவியுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்துள்ளனர். 

இது குறித்து தகவல் தெரிவித்த போலீஸார், நேஹாவை ஃபையாஸ் 6 முதல் 7 முறை கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது நடைப்பெற்றுள்ள விசாரணையின் படி, கொலையான நேஹாவும் ஃபையாசும் ஒன்றாக படித்து வந்தனர் என்பதும் இந்த கொலைக்கான காரணம் குறித்து முழு விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்றும் கூறியிருக்கின்றனர். 

காங்கிரஸ் உறுப்பினரின் மகள்..

உயிரிழந்த நேஹா, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிரஞ்சன் ஹையர்மத் என்பவரின் மகள் ஆவார். கொலை செய்யப்பட்ட நேஹா, கொலையாளியின் முன்னாள் காதலியாக இருப்பார் என்று தகவல்கள் பரவியது. இது குறித்து உள்ளூர் ஊடகத்தாரிடம் பேசிய நேஹாவின் தந்தை, தனது மகள் மிகவும் தைரியமானவர் என்றும், தன்னை காதல் டார்ச்சரை நிறுத்தவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பேன் என்று அவர் ஃபையாஸை எச்சித்ததாகவும் அவரது தந்தை தெரிவித்திருக்கிறார். நேஹாவிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டி, கல்லூரி மாணவர்களும் தன்னார்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News