காஷ்மீர் நிலைமை அரசு சொல்வதற்கு தலைகீழாக உள்ளது -யெச்சூரி!

காஷ்மீர் சென்ற சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி “அரசு சொல்வதற்கும் காஷ்மீர் நிலைமைக்கும் சம்பந்தமில்லை” என தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 1, 2019, 02:03 PM IST
காஷ்மீர் நிலைமை அரசு சொல்வதற்கு தலைகீழாக உள்ளது -யெச்சூரி! title=

காஷ்மீர் சென்ற சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி “அரசு சொல்வதற்கும் காஷ்மீர் நிலைமைக்கும் சம்பந்தமில்லை” என தெரிவித்துள்ளார்!

உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்குப் பின்னர், சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீருக்கு சென்று திரும்பியுள்ளார். அவர் காஷ்மீரிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து, “அரசு சொல்வதற்கும் அங்கிருக்கும் நிலைமைக்கும் சம்பந்தமில்லை”  எனத் தெரிவித்துள்ளார். 

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது கட்சி சகாவான முகமது யூசஃப் டாரிகாமியை சந்திப்பதற்காக யெச்சூரி, காஷ்மீருக்கு செல்ல முயற்சித்தார். ஆனால் அவருக்கு காஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து முறையிட்டார். 

உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்குப் பின்னர் காஷ்மீர் சென்ற அவர் யூசஃபைப் பார்த்துவிட்டு, திரும்பியுள்ளார். காஷ்மீரிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து, “அரசு சொல்வதற்கும் அங்கிருக்கும் நிலைமைக்கும் சம்பந்தமில்லை” என குறிப்பிட்ட அவர், காஷ்மீர் நிலைமை குறித்து நீதிமன்றத்தில், விரிவான அறிக்கை சமர்பிக்கப் போவதாகவும் யெச்சூரி கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்., டாரிகாமியைப் பார்க்க ஸ்ரீநகருக்குச் சென்றபோது, தன்னுடன் அனைத்து நேரங்களிலும் காவலுக்கு ஆள் இருந்ததாகவும், வேறு யாரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் சீதாராம் யெச்சூரி விளக்கினார். 

முன்னதாக யெச்சூரி, நீதிமன்றத்தில் டாரிகாமியை நேரில் ஒப்படைக்குமாறு ‘ஹேபியஸ் கார்ப்பஸ்' மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து அவரை காஷ்மீருக்கு நேரில் சென்று டாரிகாமியைப் பார்த்துவிட்டு வரும்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதே நேரத்தில் நீதிமன்றம், ‘இந்தப் பயணத்தின்போது எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது' என்றும் அறிவுறுத்தியிருந்தது. 

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் விதமாக மத்திய அரசு சட்டப்பிரிவு 370-னை திரும்ப பெற்றது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது. அப்போதிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ-வான டாரிகாமி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 

Trending News