சொத்துக்காக மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற தந்தை

சொத்து தகராறு காரணமாக தந்தை தனது மகன் முகம்மது பைசல், மருமகள் ஷீபா  மற்றும் பேத்திகள் மெஹரா, அஸ்னா ஆகிய நான்கு பேரை இரவு தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி வீட்டை பூட்டி போட்டு தீ வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 20, 2022, 08:30 AM IST
  • சொத்து தகராறு
  • செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர்
சொத்துக்காக மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற தந்தை title=

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழ அருகே சீனிக்குழி பகுதியில் ஹமீது (79). இவர் தனது மகன் முகம்மது பைசல் மற்றும் முகம்மது பைசலின் மனைவி ஷீபா மற்றும் இரண்டு பெண் மகள்கள் மெஹரா (17 ), அஸ்னா (13) உடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஹமீதுக்கும் தனது மகன் முகம்மது பைசல் க்கும் இடையே பல ஆண்டு காலமாக சொத்து தகராறு ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஹமீது முன்கூட்டியே திட்டமிட்டு அனைவரும் தூங்கிய பின் நள்ளிரவில் 12.30 மணிக்கு மேல் தனது மகன் மற்றும் மருமகள், பேத்திகள் தூங்கும் படுக்கை அறையை பூட்டி விட்டு ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஜன்னல் வழியாக ஊற்றி விட்டு வீட்டையும் பூட்டி அதன் பிறகு யாராவது பார்த்து இவர்களை காப்பாற்ற தீயை அணைக்க வசதியாக இருக்கும் என கருதி வீட்டில் தண்ணீர் டேங்கில் நிரம்பி இருந்த தண்ணீரை முற்றிலும் திறந்து வெளியேற்றிய பிறகு வீட்டில் உள்ள மின் இணைப்பையும் துண்டித்து விட்டார். 

மேலும் படிக்க | இறந்த தம்பியின் உருவ சிலையின் மடியில் குழந்தைகளுக்கு காதுகுத்திய அக்கா!

அதன் பிறகு ஜன்னல் வழியாக தீ பற்ற வைத்து தீயில் தனது மகன் உட்பட நான்கு பேரும் தீயில் கருகி உயிருக்கு போராடுவதை வெளியே நின்று நீண்ட நேரம் பார்த்த கொடூர தந்தை. இதனை தொடர்ந்து தீ விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் தொடுபுழ தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்து தொடுபுழ காவல்துறை உதவியுடன் தீயில் கருகி உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதனிடையே தந்தை ஹமீது தானாகவே கொலை செய்த சம்பவத்தை அக்கம் பக்கத்தினர் இடம் வெளிப்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து ஹமீதை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக தந்தை தனது மகன் முகம்மது பைசல், மருமகள் ஷீபா மற்றும் பேத்திகள் மெஹரா, அஸ்னா ஆகிய நான்கு பேரை இரவு தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி வீட்டை பூட்டி போட்டு தீ வைத்து இந்த கொடூர கொலை சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!

இதைத்தொடர்ந்து, பாக்கியம் மற்றும் அவரது கள்ளக்காதலன் முருகானந்தம் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவுக்காக பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி எரிந்த மகளின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News