12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு காரர்...

வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு காரர்..!

Last Updated : Jul 22, 2020, 05:02 PM IST
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு காரர்...  title=

வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு காரர்..!

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் 12 வயது அப்பாவி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு காரணமாணவர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்துள்ளது. சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் வேலைக்காக வெளியே சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியைப் பார்த்த, பக்கத்து வீட்டுக்காரர் அவளை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த வழக்கு குறித்த தகவலை பொறுப்பாளர் அனில் கபர்வான் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர் கரீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தலைமறைவாக உள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் தாய் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, சம்பவம் குறித்து அவரிடம் கூறப்பட்டதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். காவ்லா காவல் நிலைய பொறுப்பாளரான கர்ம்வீர் சிங், திங்கள்கிழமை காவல் நிலையத்திற்கு உட்பட்ட காரி ராம்கோர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறினார்.

ALSO READ | WATCH: நீங்கள் ஏன் முகமூடி அணியவில்லை... என கழுதையிடம் கேட்ட நிருபர்...!

அவர் மேலும், கூறுகையில், தெரியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், சந்தேகநபர் ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை அடையாளம் காண, காவல்துறை கண்காணிப்பாளர், அதிகார வரம்பு அதிகாரியின் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை உருவாக்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Trending News