"ஏழைகளின் முந்திரி' வேர்க்கடலை மார்பக Cancerஐ தடுக்கும் மாயம் என்ன?

"ஏழைகளின் முந்திரி' என அழைக்கப்படும் வேர்க்கடலை மார்பக புற்றுநோயைத் தடுக்கும். அதுமட்டுமல்ல, மண்ணின் வேரில் இருந்து கிடைக்கும் வேர்க்கடலையின் மகத்துவம் மிகப் பெரிது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 11, 2021, 05:29 PM IST
  • மண்ணின் வேரில் விளையும் வேர்க்கடலை, மார்பக புற்றுநோயை வேரறுக்கும்
  • இதயநோய்கள் ஏற்படாமல் தடுக்கும் மணிலா
  • துத்தநாக சத்துக் கொண்டது மல்லாட்டை
"ஏழைகளின் முந்திரி' வேர்க்கடலை மார்பக Cancerஐ தடுக்கும் மாயம் என்ன? title=

புதுடெல்லி: நிலக்கடலை Alias வேர்க்கடலை நமது இந்திய உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று. தென்னிந்தியர்களின் உணவில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்களில் முக்கியமான கடலை எண்ணெயை கொடுப்பதும் நிலக்கடலை தான். 

வேர்க்கடலையில் எண்ணிடலங்கா சத்துக்கள் (Nutrients) உள்ளன. மாங்கனீசு சத்து அதிகமாக உள்ள நிலக்கடலை, நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது.  நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது என்றால், இதிலுள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.

இவற்றைத் தவிர, தாமிரம், துத்தநாகம், ஒமேகா -3 என பல சத்துக்கள் உள்ளன. இவை, உடலுக்கு தீங்கு செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Also Read | Shocking Health Facts: அளவுக்கு மிஞ்சினால் வேம்பும் விஷமே!!

நிலத்தில் வேரில் விளையும் வேர்க்கடலைக்கு வட்டாரத்திற்கு ஏற்றாற்போல பல பெயர்கள் உண்டு. நிலக்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை, மல்லாட்டை என பல பெயர்களை பெற்றது நிலக்கடலை. நிலக்கடலையை அவித்தும் உண்ணலாம், வறுத்தும் உண்ணலாம், தின்பண்டங்கள் தயாரித்தும் சாப்பிடலாம். 

சரி, வேர்க்கடலை ஒரு உணவுப் பொருள் (Food) மட்டுமா, இதில் பொதிந்துள்ள சத்துக்களின் பட்டியல் மிக நீளமானது. புரதச்சத்து (Protein) உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் (nutrients) கொண்டுள்ள வேர்க்கடலை, நோய்களை நம்மிடையே அண்ட விடாமல் வேரறுக்கும்.  

அதுமட்டுமல்ல, பிற கொட்டைகளுடன் சேர்த்து வேர்க்கடலையும் உட்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தினசரி ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை சாப்பிடுவது, நமது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்பதோடு, இருதய நோயின் (heart disease) அபாயத்தைக் குறைக்க உதவும்.

Also Read | Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெங்காயம்..!!!

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்கும் வேர்க்கடலை, மார்பகங்களில் கட்டி ஏற்படுவதைத் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் (zinc), இரும்பு, வைட்டமின்கள் (Vitamins) ஆகியவை நிறைந்துள்ள நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் (Folic Acid) எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. இது மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். அதோடு, நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது நினைவாற்றலை அதிகரிக்கும், ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது "ஏழைகளின் முந்திரி' என்று அழைக்கப்படுகிறது.

Also Read | உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News