நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இவற்றை சாப்பிடக்கூடாது: சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்

Diabetic Patients: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இப்படி செய்து தங்கள் சர்க்கரை அளவை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2022, 12:51 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • பேரீச்சம்பழம் மற்றும் திராட்சையை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.
  • உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இவற்றை சாப்பிடக்கூடாது: சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் title=

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இப்படி செய்து தங்கள் சர்க்கரை அளவை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கலாம். 

பலர் நல்ல ஆரோக்கியத்தைப் பெற உலர் பழங்களை உட்கொள்கிறார்கள். ஆனால் சில உலர் பழங்கள் மற்றும் பருப்புகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

நீரிழிவு நோயாளிகள் இந்த 2 உலர் பழங்களை சாப்பிடக்கூடாது

1. பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் அல்லது கஜூர் ஆகியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

2. உலர் திராட்சை

உலர் திராட்சை பழத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடலில் குளுக்கோஸின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. ஆகையால் நீரிழிவு நோயாளிகள் திராட்சையை உட்கொள்ளக்கூடாது.

நீரிழிவு நோயாளிகள் இந்த விஷயங்களிலிருந்தும் விலகி இருப்பது நல்லது

1. வெள்ளை ரொட்டி (வைட் பிரெட்)

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் வெள்ளை ரொட்டியை தவிர்ப்பது நல்லது. பொதுவாக நீரிழிவு நோயாளிகள் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவை உண்ணக் கூடாது.

மேலும் படிக்க | மனித நுரையீரலில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் 

2. சப்போட்டா பழம்

சர்க்கரை நோயாளிகள் பழங்களில் சப்போட்டா பழத்தை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த பழம் மிகவும் இனிமையானது, அதன் கிளைசெமிக் குறியீடும் மிக அதிகமாக உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் சப்போட்டா பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

3. உருளைக்கிழங்கு

நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கையும் மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். அதிக உருளைக்கிழங்கு சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது, மேலும் அதில் கிளைசெமிக் குறியீட்டின் அளவும் மிக அதிகமாக உள்ளது. உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News