இந்தியா முழுவது மோடியின் சுனாமி அலை; நன்றி தெரிவித்த PM தாயார்!

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மோடியின் தாயார் ஹீராபென் நன்றி தெரிவித்துள்ளார்!!

Last Updated : May 23, 2019, 12:12 PM IST
இந்தியா முழுவது மோடியின் சுனாமி அலை; நன்றி தெரிவித்த PM தாயார்! title=

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மோடியின் தாயார் ஹீராபென் நன்றி தெரிவித்துள்ளார்!!

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணியளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில், குஜராத்தின் காந்திநகரில் வசித்து வரும் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அவரது தாயின் உற்சாகத்தைக் காண்பதற்காக காந்திநகரை  நோக்கி ஒட்டுமொத்த ஊடகங்களும் படையெடுத்தன. அப்போது, வீட்டு வாசலில் நின்றபடி ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு ஹீராபென் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

 

Trending News