சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஜூலை 1 முதல் 15 வரை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 25, 2020) தெரிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2020, 03:39 PM IST
    1. ஜூலை 1 முதல் 15 வரை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து
    2. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நடத்தப்படும்
    3. சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த இயலாது என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்ததாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் title=

புதுடெல்லி: ஜூலை 1 முதல் 15 வரை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை (CBSE Exam cancelled) ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) வியாழக்கிழமை (ஜூன் 25, 2020) தெரிவித்தது.

நிபந்தனைகள் உகந்தவுடன், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நடத்தப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் கூறினார். 

முன்னதாக, கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய இரண்டிற்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பல மாநிலங்கள் மனு தாக்கல் செய்திருந்தன.

READ | சிபிஎஸ்இ 10 & 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது. மேலும் இந்த தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Trending News