PAN Aadhaar Link: ‘இவர்கள்’ பான் - ஆதார் அட்டை இணைக்க தேவையில்லை!

PAN Aadhaar Link Rule: இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2024, 11:21 AM IST
  • பான் கார்டு, ஆதார் அட்டையைப் போலவே மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்று.
  • போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும்.
  • பான் கார்டை ஆதாருடன் இணைப்பது மிகவும் முக்கியம்.
PAN Aadhaar Link: ‘இவர்கள்’ பான் - ஆதார் அட்டை இணைக்க தேவையில்லை! title=

PAN Aadhaar Link Rules: இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கிய ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அந்த வகையில், இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும் என கூறப்ப்படுகிறது. அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறிய உதவும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான முக்கியத்துவம்

பெரிய அளவிலான நிதி பரிவத்தனைகளுக்கும் வரி தொடர்பான விஷயங்களுக்கும் மிக அவசியமாக தேவைப்படும் பான் கார்டு,  ஆதார் அட்டையைப் போலவே மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்று. நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பான் கார்டு வைத்திருப்பதற்கு இதுதான் காரணம். குறிப்பாக தொழிலதிபர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருப்பார்கள். பான் கார்டை ஆதாருடன் (PAN Aadhaar Linkஇணைப்பது மிகவும் முக்கியம். 

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவ்வாறு இணைக்காதவர்களின் பான் கார்டுகள் இனி, ரத்து செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக, ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க அரசு பல முறை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன் காலக்கெடு இப்போது முடிந்துவிட்டது. எனினும், சிலர் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை. ஆனால் சிலருக்கு இணைக்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டை... இந்த தப்பை செஞ்சுடாதீங்க.. கம்பி எண்ண வேண்டி வரும்!

யார்ரெல்லாம் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க தேவையில்லை

சிலர் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் அடங்குவர். இது தவிர, வருமான வரிச் சட்டத்தின்படி, குடியுரிமை இல்லாதவர்கள் அல்லது இந்தியக் குடியுரிமை இல்லாதவர்கள். அவர்கள் பான் கார்டை இணைக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில், அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் உள்ள தனிப்நபர் அல்லாதவர்கள் பான் ஆதாரை இணைக்க வேண்டிய அவசியமில்லை.  அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறப்பு நிபந்தனைகள் காரணமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதாவது நிறுவனங்கள், அறக்கட்டளைகள் பான் ஆதார் அட்டை இணைப்பு தேவையில்லை. ஆனால் தனிநபர்கள் கண்டிப்பாக பான் ஆதாரை இணைக்க வேண்டும்.

பான்-ஆதாரை இணைக்கவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள்

பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள். அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. இதனுடன், நீங்கள் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. அரசின் நலத் திட்டங்கள், பிற திட்டங்களை  பயன்படுத்திக் கொள்ள முடியாது. இதற்குக் காரணம், தற்காலத்தில் எல்லாவற்றிகும் KYC என்னும்  பயனாளிகளில் தகவல்களை சேகரிப்பது மிகவும் முக்கியமானது.

மேலும் படிக்க | சேமிப்புக் கணக்குக்கு வரி விதிக்கப்படுமா? வருமான வரிச்சட்டம் கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News