7th Pay Commission: மாநில அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. சம்பளம், ஓய்வூதியத்தில் பம்பர் ஏற்றம்

7th Pay Commission: மத்திய அரசும் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது. அதற்கு முன் பல மாநில அரசுகள் ஊழியர்களுக்கு பல பரிசுகளை வழங்கியுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2023, 07:15 PM IST
  • ராஜஸ்தான் அரசாங்கம் குறைந்தபட்ச உத்தரவாத வருமான மசோதா 2023 ஐ அறிமுகப்படுத்தியது.
  • அதில் மாநில முதல்வர் அசோக் கெலாட் வேலையின்மை உதவித்தொகை வழங்குவது பற்றி பேசினார்.
  • இது தவிர சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை இரண்டு தவணை அடிப்படையில் 15 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
7th Pay Commission: மாநில அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. சம்பளம், ஓய்வூதியத்தில் பம்பர் ஏற்றம் title=

7வது ஊதியக் கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகளை அளித்து வருகின்றது. அதே போல மாநிலங்களும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன. மாநில அரசுகள் ஓய்வூதியம் மற்றும் சம்பளம் இரண்டையும் உயர்த்தியுள்ளன. அதன் பிறகு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் அதிக பணம் வரப் போகிறது. இதனுடன் வேலை வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசும் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது. அதற்கு முன் பல மாநில அரசுகள் ஊழியர்களுக்கு பல பரிசுகளை வழங்கியுள்ளன. 

எந்தெந்த மாநிலங்கள் அதிகரித்துள்ளன?

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் அரசும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தவிர ஓய்வூதியத்தை உயர்த்த ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இப்போது 15 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்

ராஜஸ்தான் அரசாங்கம் குறைந்தபட்ச உத்தரவாத வருமான மசோதா 2023 ஐ அறிமுகப்படுத்தியது. அதில் மாநில முதல்வர் அசோக் கெலாட் வேலையின்மை உதவித்தொகை வழங்குவது பற்றி பேசினார். இது தவிர சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை இரண்டு தவணை அடிப்படையில் 15 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி, மாநில ஓய்வூதியதாரர்களுக்கு முன்பை விட 15 சதவீதம் கூடுதல் ஓய்வூதிய பலன் கிடைக்கும். முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைப்பெண்கள், ஒற்றைப் பெண்கள் ஆகிய பிரிவினருக்கு இதன் பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க | பெண் குழந்தை பிறந்தால் ரூ. 50,000 வழங்கும் மாநில அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

அகவிலைப்படி தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது

சத்தீஸ்கர் அரசும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முதல் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இம்முறை இங்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமைச்சரவை கூட்டத்தில் 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை இந்த மாநிலத்தைச் சேர்ந்த 5 லட்சம் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

சம்பளமும் அதிகரித்தது

இது தவிர, சத்தீஸ்கர் அரசு 37,000 ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தை 27 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் மாநில அரசுக்கு ரூ.350 கோடி கூடுதல் செலவாகும். இதுதவிர, கெஸ்ட் லெக்சரர்கள், பட்வாரிகள், போலீஸ் கான்ஸ்டபிள்கள், தொகுதி அளவிலான ஊழியர்கள் உட்பட பலரின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இந்த திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் பிந்தைய மாதங்களில் வந்தாலும், அகவிலைப்படி அதிகரிப்பு அரியர்  தொகையுடன் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. அந்த வரிசையில் ஜூலை 2023 முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி ஊழியர்களுக்கு கிடைக்கும். இதற்கான அறிவிப்பை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் அரசு வெளியிடக்கூடும். 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் அதிகரிக்கிறது. ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகள் ஜூலை இறுதியில் வரும். இதன் அடிப்படையில், அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது தெளிவாகும். 

46% அகவிலைப்படி

ஜூலை மாதத்தில் அகவிலைப்படியை அரசு 4 சதவீதம் உயர்த்தினால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் ஊழியர்களுக்கு 46 சதவீத டிஏ வழங்கப்படும். அதன் பின்னர் 46 சதவிகிதம் என்ற அடிப்படையில் ஜூலை 1 முதல் டிசம்பர் 2023 வரை அரசு அகவிலைப்படியை வழங்கும். அடுத்த டிஏ உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். இருப்பினும், ஜனவரி 1 ஆம் தேதிக்கான டிஏ 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மாத வருமானம் ₹20,500 ... மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News