7th Pay Commission பம்பர் செய்தி: 46% டிஏ... ஊதிய உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ

7th Pay Commission: ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 4, 2023, 11:07 PM IST
  • அகவிலைப்படி 46% அதிகரிக்கும்.
  • அகவிலைப்படி 46% ஆனவுடன் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
  • குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு.
7th Pay Commission பம்பர் செய்தி: 46% டிஏ... ஊதிய உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ title=

ஏழாவது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படி (டிஏ) அறிவிப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்திய ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு மிகவும் தேவையான உற்சாகத்தை அளித்துள்ளது. ஏஐசிபிஐ இன்டெக்ஸ் என்பது அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான இறுதித் தரவும் டிஏ குவாண்டத்தை நிர்ணயிப்பதற்கான அடித்தளமுமாகும். ஜூன் மாதத்திற்கான ஏஐசிபியை குறியீட்டு எண்ணின் புள்ளிவிவரங்கள் ஒரு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளன.

ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மே மாதத்தில் 134.7 புள்ளிகளாக இருந்த குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில் ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகளை எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் மொத்தம் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே மாத புள்ளிவிவரங்களின்படி, மொத்த டிஏ மதிப்பெண் 45.58 சதவீதமாக இருந்தது, இது ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்களைப் பொறுத்து ஜூன் 2023 இல் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அகவிலைப்படி 46% அதிகரிக்கும்

இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்ற ஊடக அறிக்கைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் மாதம் அரசால் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலா, டிஏவை உயர்த்துவதற்காகப் பின்பற்றப்படும்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. முதலாவது ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படுகிறது, இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்கப்படுகிறது.

அகவிலைப்படி 46% ஆனவுடன் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதிகரிப்புக்குப் பிறகு டிஏ 46 சதவீதமாக இருக்கும். ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், ஆண்டு டிஏ உயர்வு ரூ.8640 ஆகவும், ரூ.56,900 அடிப்படை சம்பளத்தில் ஆண்டு டிஏ உயர்வு 27,312 ஆகவும் இருக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு: டிஏ உயர்வு

1. அடிப்படை சம்பளம் - ரூ 18,000

2. தற்போதைய டிஏ 42 சதவீதம் - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.7,560

3. புதிய டிஏ 46 சதவீதம் - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.8,280

4. டிஏ அதிகரிப்பு - ரூ 8,280- 7,560 = ரூ 720 / மாதம் 

5. ஆண்டு சம்பள உயர்வு ரூ 720 X 12= ரூ 8,640

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு 3 நல்ல செய்திகள்: 50% டிஏ விரைவில்.. ஊதியம் மற்றும் எச்ஆர்ஏ -வில் அதிரடி உயர்வு

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு: டிஏ உயர்வு

1. அடிப்படை சம்பளம் - ரூ 56,900

2. தற்போதைய டிஏ 42 சதவீதம் - மாதம் ரூ 23,898

3. புதிய டிஏ 46% - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.26,174

4. டிஏ அதிகரிப்பு - ரூ 26,174 - ரூ 23,898 = ரூ 2,276 / மாதம் 

5. டிஏவில் ஆண்டு அதிகரிப்பு - ரூ 2,276 X 12 = ரூ 27,312

டிஏ உயர்வு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும்

இதற்கிடையில், புதிய டிஏ விகிதங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் வரை, ஊழியர்களுக்கு 42 சதவீத டிஏ ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அரசு அகவிலைப்படியை உயர்த்தி, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், உயர்த்தப்பட்ட தொகை ஜூலை மாதம் முதலான அரியர் தொகையுடன் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வின் பலன், 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உயர்வின் பலன் நேரடியாக வழங்கப்படும்.

இதற்கு முந்தைய அகவிலைப்படி உயர்வு 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மார்ச் மாதம் 01.01.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வழங்க ஒப்புதல் அளித்தது நினைவிருக்கலாம். விலைவாசி உயர்வை ஈடுகட்ட, அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் அப்போதைய விகிதமான 38% -இல் 4% அதிகரிப்பு ஏற்பட்டு அகவிலைப்படி 42 சதவிகிதமாக அதிகரித்தது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தில் ஏற்படும் கூட்டுப் பாதிப்பு ஆண்டுக்கு ரூ.12,815.60 கோடியாக இருக்கும். இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். தற்போது ஜூலை 2023 முதல் மீண்டும் அகவிலைப்படி 46% ஆக அதிகரிக்கும். இதற்கான அறிவிப்பு இன்னும் சில நடகளில் வெளிவரும். 

மேலும் படிக்க | ஊழியர்கள்-ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு குட் நியூஸ்..சம்பளம்-ஓய்வூதியம் உயரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News