EPF Withdrawal Rules: விதிகளிக் பெரிய மாற்றம், பிஎஃப் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி... அமைச்சர் அளித்த அப்டேட்

EPF Withdrawal Rules: இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் செயல்முறைகள் மற்றும் நிபந்தனைகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து தெரிவித்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 2, 2024, 12:53 PM IST
  • PF உறுப்பினரா நீங்கள்?
  • அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
  • EPFO, விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது.
EPF Withdrawal Rules: விதிகளிக் பெரிய மாற்றம், பிஎஃப் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி... அமைச்சர் அளித்த அப்டேட் title=

EPF Withdrawal Rules: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சமீபத்தில் பிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்கும் வகையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, விதிகளில் மாற்றங்களை செய்துள்ளது. பல புதிய விதிகளையும் ஏற்படுத்தியூள்ளது. அவற்றில் ஒரு முக்கியமான புதிய விதியை பற்றியும் அதனால் இபிஎஃப் சந்தாதாரரர்களுக்கு (EPF Subscribers) கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

EPF Subscribers:

இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் செயல்முறைகள் மற்றும் நிபந்தனைகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து தெரிவித்தார். 

- இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members), தங்கள் குடும்பத்தில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இனி அதிக தொகையை எடுக்க முடியும்.

- அரசின் இந்த முயற்சியால் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.

- முன்னர் ரூ.50,000 ரூபாயாக இருந்த இந்த வரம்பு இப்போது 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

- அடுத்ததாக, புதிய வேலை கிடைத்த முதல் ஆறு மாதங்களுக்குள் பணத்தை எடுக்கும் வகையில், அரசாங்கம் விதிகளை தளர்த்தியுள்ளது.

- முன்பு ஊழியர்கள் அவசர தேவைகளின் போது இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

- ஆனால் இப்போது PF சந்தாதாரர்க்கள் பணியில் சேர்ந்த ஆறு மாதங்களில் கூட பணத்தை எடுக்கலாம்.

'இது அவர்களது பணம், அவர்களுக்கு தேவைப்படும் போது இது அவர்களுக்கு கிடைக்கவேண்டும்' என அமைச்சர் கூறினார்.

இபிஎஃப்ஓவின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், புதிய டிஜிட்டல் கட்டமைப்பை அறிமுகப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தவும் தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் இப்போது ஆறு மாதங்களுக்கு காத்திருக்காமல் பணத்தை எடுக்க முடியும் என்ற விதி மாற்றம் ஊழியர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது. முன்னர் இருந்த விதிகள் 6 மாத காலத்துக்கு முன்னர் இபிஎஃப் கணக்கில் (EPF Amount) உள்ள தொகையை எடுக்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு எப்போது வரும்? 20%-35% ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்

EPFO: வருங்கால வைப்பு நிதி விதிகளில் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?

கட்டாய வருங்கால வைப்பு நிதி பங்களிப்பிற்கான வருமான வரம்பை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார். தற்போது ரூ.15,000 வரையிலான சம்பள வரம்பின் படிதான் ஓய்வூதிய நிதிக்கு பங்களிப்பு அளிக்கப்படுகின்றது. ஆனால் இந்த வரம்பு அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  இந்த வரன்பு கூடிய விரைவில் 21,000 ரூபாயாக அதிகரிகப்படலாம். "ரூ. 15,000-க்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, ஓய்வூதிய கார்பஸ் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காகத் தங்கள் வருமானத்தில் எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் நெகிழ்வுத்தன்மையை நாங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என்று அமைச்சர் கூறினார்.

வருங்கால வைப்பு நிதி அமைப்பு:

- ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952 இன் கீழ், 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிக்க வேண்டும். 

- இதில், பணியாளரின் சம்பளத்தில் குறைந்தபட்சம் 12% கழிக்கப்படுகிறது.

- அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. 

மேலும் படிக்க | சூப்பர் செய்தி! ரேஷன் கடைகளில் ஆதார் அட்டை மூலம் பணம் எடுக்கலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News