ஜாக்பார்ட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் புத்தாண்டு பரிசு!

ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்களின்படி, இந்த முறை அகவிலைப்படியை 4 சதவீதம் வரை அரசாங்கம் உயர்த்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Nov 16, 2022, 10:53 AM IST
  • 2023ம் ஆண்டில் ஊழியர்களுக்கு பரிசுத்தொகை.
  • அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்துவதற்கு வாய்ப்பு.
  • அரசாங்கம் ஜனவரி மாதத்திற்குள் அரசு அகவிலைப்படியை அதிகரிக்கலாம்.
ஜாக்பார்ட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் புத்தாண்டு பரிசு! title=

மத்திய அரசு தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான செய்தியினை வழங்கியுள்ளது.  ஏஐசிபிஐ இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள சில டேட்டாக்களின் படி, ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது மற்றும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசுத்தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  எவ்வளவு அளவு அகவிலைப்படி உயரும் என்பதை ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது, இந்த முறை அகவிலைப்படியை 4 சதவீதம் வரை அரசாங்கம் உயர்த்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | DA-க்குப் பிறகு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வாய்ப்பு! எவ்வளவு சம்பளம் உயரும்? 

அரசாங்கம் ஜனவரி மாதத்திற்குள் அரசு அகவிலைப்படியை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன்மூலம் 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஊழியர்கள் அதிக அலவன்ஸைப் பெறுவார்கள்.  இருப்பினும் 2023ம் ஆண்டும்  மார்ச் மாதத்திற்குள் அரசாங்கம் அதை அறிவிக்கக்கூடும்.  புதிய உத்தரவின்படி, ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கு கிடைக்கும் அகவிலைப்படி மொத்தம் 42 சதவிகிதமாக உயரும் என்று சில தகவல்கள் தெரிவிக்கிறது.  மாதந்தோறும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.720 உயரும் மற்றும் அதிகபட்ச அடிப்படை ஊதியமாக மாதந்தோறும் ரூ.2276 உயரும்.

குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் கணக்கீடு:

ஊழியரின் அடிப்படை ஊதியம் மாதம் - ரூ.18,000
மாதாந்திர புதிய அகவிலைப்படி (42%) - ரூ.7560 
தற்போதைய மாதாந்திர அகவிலைப்படி (38%) மாதம் - ரூ.6840
அகவிலைப்படி அதிகரிப்பு - ரூ.720 .
ஆண்டு ஊதியத்தை உயர்த்தும்போது 720X12 = ரூ 8640 கிடைக்கும்.

அதிகபட்ச சம்பளத்தின் அடிப்படையில் கணக்கீடுகள்:

ஊழியரின் அடிப்படை ஊதியம் - ரூ. 56900.
மாதாந்திர புதிய அகவிலைப்படி (42%) - ரூ. 23898
தற்போதைய மாதாந்திர அகவிலைப்படி (38%) - ரூ. 21622.
அகவிலைப்படி அதிகரிப்பு ரூ. 2276.
ஆண்டு ஊதியத்தை உயர்த்தும்போது 2276X12 = ரூ.27312 கிடைக்கும்.

மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News