பாகிஸ்தானின் சீமா ஹைதர் காதல் விவகாரம்.... பீதியில் உள்ள பாகிஸ்தான் இந்துக்கள்!

காதலுக்காக பாகிஸ்தானை விட்டு ஓடி இந்தியா வந்தார் சீமா ஹைதர். இங்கு இந்து மதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2023, 12:47 PM IST
  • பாகிஸ்தானில் இருந்து வந்த சீமா ஹைதர் இந்து மதத்திற்கு மாறினார்.
  • சீமா ஹைதர் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானில் இந்துக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.
  • சிந்துவில் வாழும் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சீமா ஹைதர் காதல் விவகாரம்.... பீதியில் உள்ள பாகிஸ்தான் இந்துக்கள்!  title=

இஸ்லாமாபாத்: காதலுக்காக இந்தியாவுக்கு ஓடிய சீமா ஹைதர் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். சீமா ஹைதர் PUBG கேம் மூலம் இந்தியாவின் சச்சினை சந்தித்தார். கொஞ்ச நாள் பேச்சு வார்த்தைக்குப் பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியா வந்து, இந்து மதத்துக்கு மாறினாள். ஆனால் அவர் இந்தியா வருவதால், பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அடிப்படைவாதிகள் மிரட்டி வருகின்றனர். சீமா ஹைதர் வழக்குக்குப் பிறகு, பாகிஸ்தான் இஸ்லாமியர்களின் அச்சுறுத்தல்களால் சிந்து இந்துக்கள் பீதியில் உள்ளனர். மக்கள் கோவில்களுக்கு செல்வதை குறைத்துவிட்டனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து கோவில்கள் அருகிலும், உள்ளூர் பகுதிகளிலும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. சிந்துவின் கச்சா பகுதியில் கும்பல் நடத்தி வரும் உமர் ஷார் என்ற பயங்கரவாதி "எங்களின் இந்த எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால், பக்ஷ்பூர், காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள கோவில்களைத் தாக்குவேன்" என்று மிரட்டினார். மிரட்டல் வீடியோ எடுக்கும் போது அவர் கையில் பல வெடிகுண்டுகள் இருந்தன. அவர் தனது கூட்டாளிகளுடன் அமர்ந்திருந்தார். இவர்களுக்கு ஏற்கனவே இலக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரத்து செய்யப்பட்ட சத்சங்கம் 

காவல்துறையினரால் கூட இந்துக்களை தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியாது என்று எஸ்எஸ்பி கோட்கி தன்வீர் துனியோவையும், உமர் ஷார் எச்சரித்தார். சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன, இது சீமா ஹைதரை தாய் நாட்டிற்கு திரும்ப வர வைக்க நடவடிக்கை எடுத்தது போல் தோன்றுகிறது. இந்து கோவில்களின் பாதுகாவலர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் நடைபெறவிருந்த சத்சங்கம் ரத்து செய்யப்பட்டதாக உள்ளூர் இந்து ஒருவர் தெரிவித்தார்.

இந்துக்களுக்கு அச்சுறுத்தல்

சத்சங்கத்தில் 300 பெண்கள் வழிபடுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்துள்ளோம். மற்றொரு உள்ளூர் இந்து, 'சரியான பாதுகாப்பு இல்லை. இதில் எனக்கு திருப்தி இல்லை. அதே சமயம் ஒருவர், 'எல்லைப் பிரச்னைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நமது பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள். சிந்துவில் சட்டம் ஒழுங்கு நிலைமை இந்துக்களுக்கு சாதகமாக இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | எல்லை தாண்டிய PUBG காதல்... இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்...!

சீமா ஹைதர் காதல் விவகாரம்

பப்ஜி காதலர் சச்சின் மீனாவுடன் இணைந்து வாழ தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதரை, உத்தர பிரதேசத்தின் ரபுபுரா காவல்துறை கடந்த ஜூலை 3ஆம் தேதி, கைது செய்தது.இந்த சம்பவம் நடந்து சில நாள்களுக்கு பின், தற்போது சீமாவின் கணவர் குலாம் ஹைதர், தனது நான்கு குழந்தைகளையும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாகத் திரும்பப் அனுப்ப உறுதிசெய்யுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்தியா வந்த சீமா ஹைதர்

முன்னதாக, சீமா சவூதி அரேபியாவில் இருந்து ஷார்ஜா வழியாக நேபாளத்திற்குச் சென்று காத்மாண்டுவில் சச்சினுடன் ஒரு வாரத்திற்கு மேல் நாள்களைச் செலவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, சீமா நேபாளத்திலிருந்து பேருந்து மூலம் இந்தியாவிற்குள் நுழைந்து, மே 13ஆம் தேதி முதல் சச்சினுடன் வசிக்கத் தொடங்கினார். இருப்பினும், அவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சீமா ஹைதர் மற்றும் சச்சின் மீனா ஆகிய இருவருக்கும் ஒரு நாள் முன்பு நகர நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் கிடைத்த பின் பாகிஸ்தானின் சீமா ஹைதர் மற்றும் அவரது இந்திய காதலர் சச்சின் மீனா இருவரும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தங்கள் ரபுபுரா வீட்டிற்குத் திரும்பினர்.

மேலும் படிக்க | பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் - மோடிக்கு கோரிக்கை வைத்த கணவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News