நேற்று உச்சநீதிமன்றத்தில் காவேரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அதைக்குறித்து திமுக கழக செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதைக்குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பு நாடாளுமன்ற முடிவுக்கு உட்பட்டதே என்று மத்திய அரசு கூறியது. மேலும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 60_வது நாளாக போராடி வருகின்றனர்.
முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் நடக்கவிருந்த சட்டநகல் எரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாறாக வரும் 16-09-2017 சனிக்கிழமையன்று "உண்ணாநிலை அறப்போராட்டம்" நடைபெறும் என தொல். திருமாவளவன், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
"முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நாளை(09-09-2017) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த "நீட்-சட்ட நகல் எரிப்புப் போராட்டம்" ஆனது மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தவிர்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதமாக நடைபெற்றது.
அதன்பிறகு தமிழகம் திரும்பிய விவசாயிகள், சில நாட்கள் கழித்து மீண்டும் டெல்லி ஜன்தர்-மன்தர் பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ம் கட்ட போராட்டத்தை தொடக்கி இன்றுடன் 56_வது நாளாக போராடி வருகின்றனர்.
நீட் சட்டத்தைத் திரும்பபெற வலியுறுத்தி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ சட்ட நகல் எரிப்புப் போராட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
'நீட்' தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடல தகனம் செய்யப்பட்டது.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கோரி அரியலூர் மாவட்ட குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
#WATCH: Villagers in Ariyalur district's Kulumur protest over death of #Anitha who appealed against NEET in SC, demand justice #TamilNadu pic.twitter.com/m658uINM29
நேற்று குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வந்த அவரின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் கண்டனத்துக்குறியது என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக, கதிராமங்கலத்தில் மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
இந்த களத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள், கதிராமங்கலம் வந்து நேரடியாகத் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கதிராமங்கலம் வந்துள்ளார். நேரடியாக போராட்டக் களத்துக்கு வந்துள்ள அவர், அங்கு போராடும் மக்களிடம் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு தான் நேரடியாக நியமித்துள்ளது. மேலும் இது சட்டப்படி தான் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விவகாரம் சரி செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பந்த் போராட்டம் தொடங்கியது. இதனையடுத்து புதுச்சேரியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வரும் ஜூலை 4-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஊழலை மூடி மறைக்க தமிழக அரசு முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், வறட்சி நிவாரணத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடந்தது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, டெல்லியில் போராட்டம் நடைபெற்றபோது விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற விவசாயிகள் அனைவரும் அகில இந்திய அளவில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அய்யாக்கண்ணு மற்றும் வட இந்திய விவசாயிகள் முடிவு செய்தனர்.
வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்ததைக் கண்டித்து, சென்னை மலேசிய தூதரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக கழகம் கூறியுள்ளது.
இதைக்குறித்து மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கூறியதாவது:-
மதிமுக கழகப் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக சென்னையில் உள்ள மலேசியா தூதரகத்தில் கடவுச்சீட்டு வாங்கி, அனுமதிபெற்று நேற்று இரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாணத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகள் எவ்வளவுதான் போராடினாலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
மாட்டுக்கறி விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து, சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறைச்சிக்கான கால்நடைகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு புதிய நிபந்தனைகளை மத்திய அரசு புகுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் பெரியார்-அம்பேத்கர் வாசக வட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற ஐஐடி ஏரோஃபேஸ் மாணவர் மாட்டுக்கறி விருந்தை நடத்தினார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மதுக்கடைகளை மூடச் சொல்லி தமிழகம் முழுவதும் மகளிரே தாமாக முன் வந்து மதுக்கடைகளின் முன்பு கூடி போராடுவது, கடைகளை உடைப்பது, மதுபாட்டில்களை எடுத்து தெருவில் வீசுவதும் அன்றாடக் காட்சி ஆகி வருகிறது.
அதனை அடக்கி ஒடுக்க காவல் துறையினர் பொது மக்களை, பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தடியால் தாக்குவதும் கண்டிக்கத்தக்கது.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணப்பட்டுள்ளதால், இந்த முடிவுக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று தென்னூரில் உள்ள, பெரிய நாச்சியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றார். அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
தமிழகம் முழுவதும் 2_வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை உட்பட மாநிலத்தின் பெரும்பாலான ஊர்களில் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கூடுதலாக தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களைக் கொண்டு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.