நயன்தாரா நடிக்கும் “அறம்”படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது
மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு 55-வது படமான "அறம்" திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ட்ரைலர்:
மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு 55-வது படமான "அறம்" திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார்.
இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர்.
மேலும் 10 நாட்கள் படமாக்கப்படவுள்ள குறித்த படத்தில் 1500 பேர் பணியாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
பிஸியாக நடித்து வரும் தமிழகத்தின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனின் பர்த்டேவை அவருடன் நியூயார்க்கில் சிறப்பாக கொண்டாடினார்
விக்னேஷ் சிவனுடன் நயன் எடுத்துக் கொண்ட செல்ஃபி சமுக வலைதளத்தில் வைரலானது. தற்போது, நியூயார்க்கில் இருக்கும் நயன்தாரா முன்னணி பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ராவை சந்தித்துள்ளார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். இவரின் சமீபத்திய படமான ‘குற்றம் 23’ சூப்பர் ஹிட்டானது.
எனவே இவர் தனது அடுத்த படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்பட்டது. முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்க உள்ளார்.
ஆனால் தற்போது மஞ்சு வாரியருக்கு பதில் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்கலாம் என தகவல் வந்துள்ளது. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக செப்டம்பர் 29-ம் தேதி ‘வேலைக்காரன்’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக இதற்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24AM STUDIOS தெரிவித்துள்ளது.
நயன்தாராவின் அடுத்த திரைப்படம், 'கோகோ' எனும் 'கோலமாவு கோகிலா'-வில் அணிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கம் படம் 'கோலமாவு கோகிலா'. இத்திரைப்படம் காமெடி மற்றும் க்ரைம் தோணியில் உருவாக உள்ளது எனவும் வழக்கமான திரைப்படங்களை போல் இல்லாமல் புதுவகையில் அமையும் எனவும் படக்குழு தெரிவித்தது.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் 2017 கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ம் தேதி அபிதாபியில் நடைபெற்றது.
இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நயன்தாரா மற்றும் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.
விழாவின் போது லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை நயன்தாராவிடம் போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவில் அம்மா, மகளாள நடிப்பதற்கு விருப்பம் இருந்தால் எங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற ரீதியில் கொடுத்திருக்கிறார்.
இந்த ஆண்டின் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள்
நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருது:- சிவகார்த்திகேயன்
சிறந்த நடிகைக்கான விருது:- நயன்தாரா
சிறந்த பாடகருக்கான விருது:- அனிரூத்
சிறந்த பாடலாசிரியரருக்கான விருது:- மதன் கார்க்கி
சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்கான விருது:- திரிஷா
மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார்.
டீசர்:-
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. திகில் காட்சிகள் படத்தில் அதிகம் இடம்பிடித்துள்ளதால் சென்சார் போர்டு இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ‘டோரா’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்ததற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்சார் போர்டை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
‘டோரா’ திரைப்படம் இம்மாதம் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நேமிஜந்த ஜெயக் நிறுவனத்துடன் இணைந்து சற்குணம் சினிமா தயாரிக்க, புதுமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்க, நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் ‘டோரா’ . இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையும், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
இப்படம் திகில் கலந்த பேய் படமாக உருவாகியுள்ளது. காருக்குள் இருக்கும் பேய்க்கும் அதை ஓட்டும் நயன் தாராவுக்கும் இடையில் நடக்கும் திக் திக் சம்பவங்கள்தான் கதை. இப்படம் இம்மாதம் 31-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் சற்குணம் தயாரிபில் அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி எழுதி இயக்கியிருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்து வரும் படம் “டோரா.’
இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கெனவே வெளிவந்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில், இந்த படத்தின் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். அருமையான வரிகள்...
பாடல் பார்க்க:-
தமிழ், தெலுங்கு பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா, அனுஷ்கா உள்ளனர். மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் தயாரிப்பாளர்களிடம், சம்பளத்துக்கு வரி கட்டி பணத்தை வெள்ளையாக தரும்படி இருவரும் வற்புறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இருவரும் வரி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க தயாரிப்பாளர்களையே வரி செலுத்திவிட்டு, பின்னர் தங்களுக்கான பணத்தை வெள்ளையாக வழங்குமாறு வலியுறுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கும் 'கொலையுதிர் காலம்' படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் மூலம் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.