கரூர் அருகே சுமார் இரண்டரை ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த அம்மா பூங்காவை எம்.பி. ஜோதிமணி ஆய்வு செய்தபோது அதிமுகவினர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது
திமுக ஆட்சிக்கு வந்த பின் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு பலர் வேலை இழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுத் திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசுத் திட்டங்கள் எனக் கூறி திமுக அரசு பொய் பிரச்சாரம் செய்வதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளைப் பெற தமிழக அரசியல் வட்டாரத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கான குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் நெளஷாத்திடம் கேட்கலாம்.
தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Governor RN Ravi - RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதன் பின்னணியை இங்கு காணலாம்.
சென்னை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திருவொற்றியூர் பகுதி கவுன்சிலர் கவி கணேசன், வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக்கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவினர் மீது ஐடி ரெய்டு நடப்பது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம்? உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி என விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.