‘தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம்

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவிப்பு..! 

Last Updated : Jul 5, 2020, 03:32 PM IST
    1. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
    2. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.
    3. காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.
    4. கோவை, ஈரோடு, சேலம், தேனி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
‘தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் title=

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவிப்பு..! 

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக வட தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழையும், கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

READ | தாயகம் திரும்பும் தமிழர்களின் மருத்துவப் பரிசோதனை செலவை அரசு ஏற்பதே சரி: MKS

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Trending News