தமிழகத்தில் ரயில் நிலையங்களில் போலீசார் உஷார்!! காரணம் இதுதான்!

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

Last Updated : Apr 27, 2019, 08:29 AM IST
தமிழகத்தில் ரயில் நிலையங்களில் போலீசார் உஷார்!! காரணம் இதுதான்! title=

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்தார். இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர் போனில் பேசி திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான நகரங்களில் குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் இதற்காக நுழைந்துள்ளார்கள் என்று மர்ம நபர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த தகவலையொட்டி, பெங்களூரு போலீசார் தமிழ்நாடு உள்ளிட்ட மேற்கண்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பினார்கள். இதையடுத்து மிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டது.

Trending News