தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்...அதிமுகவுக்கு பேரிழப்பு; முதல்வர் சோகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு 11.15 மணிக்கு காலமானார்.

Last Updated : Nov 1, 2020, 11:06 AM IST
    1. தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர்.தொரைக்கண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது
    2. அக்டோபர் 13 ஆம் தேதி அவர் அரசாங்கத்திலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்
    3. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு 11.15 மணிக்கு காலமானார்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்...அதிமுகவுக்கு பேரிழப்பு; முதல்வர் சோகம்  title=

சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (R Doraikannu) தனது 72 வயதில் காலமானார். அவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுடன் (Coronavirus Infection) போராடி வந்தார். காவிரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ.செல்வராஜ் வெளியிட்ட மருத்துவ புல்லட்டின், சனிக்கிழமை இரவு அமைச்சரின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

அக்டோபர் 13 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12 இரவு சேலத்தில் மரணம் அடைந்தார். இதுகுறித்து கேள்விப்பட்டு அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காரில் சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. 

 

ALSO READ | தமிழகத்தில் நவ.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு... பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி..!

 

அதன்பிறகு அக்டோபர் 13 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. அப்போதிருந்து, அவர் இங்கு சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. பின்னர் திடீரென அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தார். இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் நேற்று இரவு 11.15 மணிக்கு காலமானார்.

Image

இதையொட்டி இன்று காலை தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என்றார்.

 

ALSO READ | COVID-19 updates in Tamil Nadu: கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் நிலவரம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News