சிறுவனின் கொலையில் திடீர் திருப்பம்..! பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அம்பலம்!

தருமபுரியில் சிறுவன் ஒருவன் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Bhuvaneshwari P S | Edited by - RK Spark | Last Updated : Jul 19, 2023, 03:50 PM IST
  • பள்ளிக்கு சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
  • விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
  • பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.
சிறுவனின் கொலையில் திடீர் திருப்பம்..! பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அம்பலம்! title=

தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுவன். சிறுவனின் தந்தை ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள தொடக்க பள்ளிக்கு  விளையாடச் சென்ற  சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர் ஆங்காங்கே தேடி பார்த்தும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

மேலும் படிக்க | இபிஎஸ் மீதான புகார்... திமுக மனு அதிரடி தள்ளுபடி - நீதிபதி தீர்ப்பில் சொன்னது என்ன?

dhar

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் கிராம மக்களிடமும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்ட போது சிறுவனை பிரகாஷ் என்ற இளைஞர் அழைத்துச் சென்றதாக தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து பிரகாஷை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் சிறுவனை பயன்பாட்டின்றி கிடந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கொலை செய்து கட்டி போட்டு வீசியது தெரியவந்தது. 

இதில் சிறுவனுக்கு தின்பண்டம் வாங்கித்தருவதாகக் கூறி பிரகாஷ் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சிறுவனை கூட்டிக்கொண்டு கை, கால் மற்றும் வாய்யை கட்டி  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுவன் வெளியே சொல்லி விடுவானோன் என்ற அச்சத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்து தொட்டியில் வீசிவிட்டு சென்றுள்ளார். இதனை வாக்குமூலமாக கைதான இளைஞர் பிரகாஷ் கூறியுள்ளார். 

dhar
    
இதனையடுத்து இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி - திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 6 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உறவினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை... இன்று மீண்டும் ஆஜர் - இதுவரை நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News