சசியம்மா முதல்வராக பதவியேற்பது உறுதி- சொல்லுவது பொன்னையன்

Last Updated : Feb 7, 2017, 02:08 PM IST
சசியம்மா முதல்வராக பதவியேற்பது உறுதி- சொல்லுவது பொன்னையன் title=

சசிகலா முதல்வராக பதவியேற்பார். இதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை'' என்று பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது உள்ள பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியதாவது:-

சிலர் அரசியல் ஆதாயத்திற்காக வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதிமுக நலத்திட்டங்களுக்காகவே மக்கள் தேர்தலில் வாக்களித்தார்கள். ஒருமனதாகவே சசிகலா பொதுச்செயலாளராகவும், முதல் - அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் ஆதாயத்திற்காக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். மத்திய அரசுக்கும், அதிமுக அரசுக்கும் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளை திறம்பட செயல்படுத்தக் கூடியவர் சசிகலா ஆளுநரின் வசதிக்கேற்ற நாளில் முதல்வராக சசியம்மா பதவியேற்பார் என அவர் கூறினார்.

 

Trending News