பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்; மேலும் ஒருவர் கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நபரை புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்!

Last Updated : May 13, 2019, 10:11 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்; மேலும் ஒருவர் கைது! title=

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நபரை புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தமிழக சிபி சிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆபாச வீடியோங்களில் காணப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கு என இரண்டு வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் முதல் தகவலறிக்கையை பதிவு செய்த சிபிஐ கடந்த ஒரு வாரமாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்து வழக்கு தொடர்பாக மணி என்பர் 5-ஆம் நபராக கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிவண்ணன் மீது தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கு பாய்ந்துள்ளது.

புகார் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மணிவண்ணன் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிவண்ணனை பாலியல் வழக்கில் கைது செய்ததற்கான ஆவணங்களை, கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறனர். விரைவில் மேலும் 3 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Trending News