நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தைகள்... ஆரம்பமானது விசாரணை; ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான விசாரணை ஆரம்பித்துவிட்டதாகவும் அதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படுமென்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 14, 2022, 01:26 PM IST
  • விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்
  • வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்
  • இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது
 நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தைகள்... ஆரம்பமானது விசாரணை; ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் title=

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். இதனையடுத்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என கூறப்படுகிறது. அதேசமயம் நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுந்தது.

Nayan, Vignesh shivan

நிலைமை இப்படி இருக்க இந்த விவகாரம் தொடர்பாக நயனிடமும், விக்னேஷ் சிவனிடமும் விளக்கம் கேட்கப்படுமென்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். மேலும், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. எனவே அங்கு பணி செய்யும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்தது. அதன்படி மூன்றுபேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நயன்தாரா, விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்றார். இதனால் நயன் - விக்னேஷ் சிவன் விவகாரம் சூடுபிடித்துள்ளது.

மேலும் படிக்க | பூவையார் கார் வாங்க பணம் கொடுத்தது யார்? விலை எவ்வளவு தெரியுமா?

இதற்கிடையே கேரளாவில் இருக்கும் நயனின் தோழிகள் மூலம் ஒரு பெண் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்தான் வாடகை தாயாக குழந்தை பெற்றுக்கொடுத்ததாகவும், அவரிடமும் விசாரணை குழு விசாரிக்குமென்று கூறப்படுகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News