மோடியால் நாடு வளர்ச்சி அடையவில்லை; தளர்ச்சி தான் அடைந்திருக்கிறது: MKS

பிரதமர் மோடியால் நாடு வளர்ச்சி அடையவில்லை; தளர்ச்சிதான் அடைந்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

Last Updated : Mar 28, 2019, 12:40 PM IST
மோடியால் நாடு வளர்ச்சி அடையவில்லை; தளர்ச்சி தான் அடைந்திருக்கிறது: MKS title=

பிரதமர் மோடியால் நாடு வளர்ச்சி அடையவில்லை; தளர்ச்சிதான் அடைந்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து, மதுரை வண்டியூரில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாதான் நடந்துள்ளது, இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் இதுபோல வெறும் அறிவிப்புகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்றார். தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட உருவாகும் சூழல் ஏற்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மதுரை உட்பட தமிழகத்தின் நகரங்களுக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கும் விடை இல்லை என அவர் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு பற்றி கேட்டால் பக்கோடா விற்கலாமே என கேட்கும் அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாகக் கூறிய மு.க.ஸ்டாலின் கவிதை ஒன்றையும் வாசித்தார். தமிழகத்தில் பேயாட்சி நடைபெறுவதாகவும், சட்டம் ஒழுங்கு நிலைமையோ மோசமாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் சாடினார். கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மிகப்பெரிய கொடுமை என்றும், தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இதுவே சான்று என்றும் அவர் கூறினார்.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் மூலம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிவராது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த உண்மை வெளிக்கொண்டுவரப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

 

Trending News