எட்டாவது நாளாக தொடரும் சங்கரன்கோவில் விசைத்தறித் தொழிலாளர்கள் போராட்டம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 8 ஆவது நாளாக இன்று வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சாலை மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 5, 2024, 12:37 PM IST
  • கடந்த 2021 ஆம் ஆண்டு விசைத்தறியாளர் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
  • ஆனால் இன்று வரை அந்த கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை.
  • இதனால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எட்டாவது நாளாக தொடரும் சங்கரன்கோவில் விசைத்தறித் தொழிலாளர்கள் போராட்டம் title=

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 8 ஆவது நாளாக இன்று வேலை நிறுத்தப் 
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சாலை மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 6000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமார் 18 ஆயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு விசைத்தறியாளர் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை. 

இது பற்றி கேள்வி எழுப்பியும்,  தற்போது விசைத்தறி தொழிலாளர்களுக்கு 50% கூலி உயர்வு வழங்கவேண்டும் என்றும், விடுமுறை சம்பளம் நாளொன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என்றும் கூறி, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 27 ஆம் தேதி முதல் விசைத்தறித் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பிரதமர் மோடி - பிடிஆர் ரகசிய சந்திப்பு..! வெளியான புகைப்படம் - பின்னணி என்ன?

8ஆவது நாளாக  இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. கூடுதலாக இன்று சாலை மறியல் போராட்டத்திலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தால்  நாளொன்றுக்கு ரூ.1.8 கோடி வீதம் ரூ .8கோடியே 64 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு கூலி உயர்வு பிரச்னைக்கு உடனே தீர்வு காணவேண்டும் என விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | லிம்போ ஸ்கேட்டிங்கிலும் அசத்தி தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News