வன்கொடுமைக்கு ஆளான 13 வயது மாணவி... மேலும் 12 பேருக்கு பாலியல் தொல்லை - கிருஷ்ணகிரியில் ஷாக்!

Tamil Nadu Crime News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில், என்சிசி பயிற்சியாளர் 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், 12  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Aug 19, 2024, 02:04 PM IST
  • முக்கிய குற்றவாளியான சிவராமனை கோவையில் போலிசார் கைது செய்துள்ளனர்.
  • சிவராமன் முன்னாள் நாதக நிர்வாகி ஆவார்.
  • மேலும் தாளாளர், முதல்வர் உள்பட 7 பேரும் போக்சோவில் கைது.
வன்கொடுமைக்கு ஆளான 13 வயது மாணவி... மேலும் 12 பேருக்கு பாலியல் தொல்லை - கிருஷ்ணகிரியில் ஷாக்! title=

Tamil Nadu Shocking Crime News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த ஆக. 5ஆம் தேதி முதல் ஆக.9ஆம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (என்சிசி) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அந்த தனியார் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். 

அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர். இந்த நிலையில் என்சிசி முகாமிற்கு சென்ற 13 வயதுடைய 8ஆம் வகுப்பு மாணவி கடந்த ஆக. 8ஆம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.

13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை

அப்போது அதிகாலை 3 மணி அளவில், என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சிவராமன் (30) என்பவர் மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தகவல் தெரிவித்தார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்

இந்த நிலையில் கடந்த ஆக. 16ம்தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது தாயார் மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

போலீசார் அதிரடி நடவடிக்கை

தொடர்ந்து, அந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யகலா விசாரணை தொடங்கினார். விசாணையில், என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினார்கள்.

8 பேர் கைது

இதில் பள்ளியின் முதல்வரான சதீஷ்குமார், பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிபர், பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, பயிற்சியாளர்கள் சக்திவேல், சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கைதான சுப்பிரமணி முன்னாள் சிஆர்பிஎப் வீரர் ஆவார். 

மேலும், தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான சிவராமன், சுதாகர் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், சிவராமனை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சி முன்னாள் இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர். 

மேலும் 12 மாணவிகள்

மேலும் முகாமிற்கு சென்ற 17 மாணவிகளில், ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மேலும் 12 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 

போலி என்சிசி முகாம்

மேலும், என்சிசி பிரிவே இல்லாத தனியார் பள்ளியில் சிவராமன் போலியாக என்சிசி முகாம் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட போலி என்சிசி மாஸ்டர் சிவராமனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒய்வு பெற்ற சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியை என்சிசி கமாண்டர் என கூறி நம்ப வைத்ததாக கூறப்படுகிறது. 

சிவராமன் இதே போன்று சூலகிரி பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளிலும் போலி என்சிசி கேம்ப் நடத்தியது அம்பலமாகியிருக்கிறது. அந்த பள்ளிகளில் எடுக்கப்பட்ட என்சிசி கேம்ப் போட்டோக்களை காட்டி, இந்த பள்ளியிலும் சிவராமன் என்சிசி முகாமை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.  

கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவருக்கு நடந்த கொடுமை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில், கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில், 8ஆம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், அதற்கு பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், சக பயிற்சியாளர்கள் உடந்தையாக இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | கொல்கத்தாவை அடுத்து உத்தரகாண்டில்... வன்கொடுமைக்கு ஆளான செவிலியர் - தவிக்கும் 11 வயது மகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News