3-வது நாளாக தொடரும் சோதனை!

சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகங்களில் கடந்த 9-ஆம் தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே.

Last Updated : Nov 11, 2017, 09:57 AM IST
3-வது நாளாக தொடரும் சோதனை! title=

சென்னை: சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகங்களில் கடந்த 9-ஆம் தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து நேற்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. முன்னதாக சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா மற்றும் விவேக் வீடுகளில் 3-வது நாளாக இன்று வருமான வரிதுறை சோதனை நடத்தி வருகிறது.

Trending News