மோடிக்கு முதல்வர் கடிதம்! அணை பாதுகாப்பு மசோதாவில் மறு ஆய்வு வேண்டும்!

அணை பாதுகாப்பு மசோதாவை மறு ஆய்வு செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்!

Last Updated : Jun 15, 2018, 02:13 PM IST
மோடிக்கு முதல்வர் கடிதம்! அணை பாதுகாப்பு மசோதாவில் மறு ஆய்வு வேண்டும்! title=

அணை பாதுகாப்பு மசோதாவை மறு ஆய்வு செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்!

இது குறித்து எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,,,! ஜூன் 13ம் தேதி அணை பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் ஆட்சேபங்களை கருத்தில் கொள்ளாமல் ஒப்புதல் தந்துள்ளது அமைச்சரவை. அனைத்து மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு பிறகே மசோதாவை கொண்டுவர வேண்டும் என்றார். 

தொடர்ந்து அவர்,,! அணைகளை மாநில அரசே பராமரிக்க வேண்டும் என்ற அறிவிப்பு தவறானது. மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா உள்ளது. எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஒருமித்த கருத்து ஏற்படும் வரை அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும். மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்த பிறகே மசோதாவை கட்டாயமாக்க வேண்டும். அவசரகதியில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற கூடாது என அந்த கடிதத்தில் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.

Trending News