அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த DMK பொதுச்செயலாளர் அன்பழகன் வீடு திரும்பினார்!

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த DMK பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லம் திரும்பினார். 

Last Updated : Jan 28, 2019, 08:30 AM IST
அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த DMK பொதுச்செயலாளர் அன்பழகன் வீடு திரும்பினார்! title=

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த DMK பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லம் திரும்பினார். 

DMK பொதுச்செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். இவர் சமீப காலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். 

கடந்த அக்டோபர் 20ம் தேதி அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த DMK பொதுச்செயலாளர் க.அன்பழகன் தற்போது வீடு திரும்பினார்.  உடல்நலனை கருத்தில் கொண்டு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை நேரில் சந்திக்க வரவேண்டாம் என திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Trending News