அதிமுகவில் தினகரன், வெங்கடேஷ் மீண்டும் சேர்க்கப்பட்டனர்

டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அதிமுக-வில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Feb 15, 2017, 10:21 AM IST
அதிமுகவில் தினகரன், வெங்கடேஷ் மீண்டும் சேர்க்கப்பட்டனர்  title=

சென்னை: டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அதிமுக-வில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்த வெளியேற்றப்பட்டனர். இவர்கள் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் செய்த தவறுக்காக நேரில் மன்னிப்பு கடிதம் அளித்ததாகவும் சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மன்னிப்பு கேட்டதை ஏற்று அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இன்று பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்து, சிறைக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் தினகரன் மற்றும் வெங்கடேஷ் மீண்டும் அதிமுக-வில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Trending News