Crime News: பட்டப் பகலில் பயங்கரம்... அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை

Crime News: திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 30, 2024, 01:58 PM IST
  • திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் நடந்த பயங்கரம்.
  • அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டி கொடூரக் கொலை.
  • துப்பாக்கி, அருவாளுடன் வந்த மர்மகும்பல் தப்பி ஓட்டம்.
Crime News: பட்டப் பகலில் பயங்கரம்...  அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை title=

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப் பகலில் நடந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் .இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர்.இவரது மனைவி கயல்விழி சேகர். இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர்கள் கேபிள் தொழில் செய்து வருகின்றனர். பன்றியும் வளர்த்து வருகின்றனர். கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27). டிப்ளமோ இன்ஜினியர்.

தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறு

பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும் கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் தொடர்ந்து இருந்து வருகிறது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்த முன் விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

முகத்தை வெட்டி சிதைத்த மர்ம நபர்கள் 

இந்நிலையில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் முத்துக்குமார் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை (Crime News) செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததாக தகவல்

சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராவில்பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன் உருவாக்கத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவன் பேரில் போலீசார் விசாரணையில் தீவிர படுத்தியுள்ளனர்.

போலீஸார் திவீர விசாரணை

மேலும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இறந்து போன முத்துக்குமார் மீதும் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது .திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் படிக்க | IMD ALERT: ஊட்டியில் இப்படியா? மக்கள் அதிர்ச்சி.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News