பாக் வீரரின் பெயரை நிராகரித்த வாட்சன்: இந்திய வீரருக்கு புகழ்மாலை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் இரண்டாம் இடம், இந்த இந்திய வீரர் தான் நம்பர் ஒன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 21, 2022, 01:11 PM IST
  • ஷேன் வாட்சன் வெளியிட்ட கணிப்பு
  • பாக் வீரரின் பெயரை நிராகரித்தார்
  • இந்திய வீரரின் பெயரை தேர்வு செய்தார்
பாக் வீரரின் பெயரை நிராகரித்த வாட்சன்: இந்திய வீரருக்கு புகழ்மாலை title=

பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் ஆசாம், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் தொடர்ச்சியான ஆட்டம், சர்வதேச அளவில் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் ஈர்த்துள்ளது. தற்போது நல்ல பார்மில் இருக்கும் அவர்,  ஐசிசி தரவரிசையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்டராக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக இருக்கிறார் பாபர் ஆசாம். மூன்று வடிவங்களிலும் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் ஒரே பேட்டர் இவர்தான். 

இதனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் பாபர் ஆசாம் ஒப்பிடப்பட்டு வருகிறார். ஆனால், பாபர் ஆசாம், விராட் கோலியுடன் ஒப்பிடுப்படுவதை நிராகரித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். ஐசிசி மதிப்பாய்வில் இசா குஹாவுடன் உரையாடிய ஷேன் வாட்சன், கோஹ்லியை சிறந்த டெஸ்ட் பேட்டராக தேர்வு செய்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், விராட்கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இல்லை. 

மேலும் படிக்க | மந்திரம் எல்லாம் சொல்ல மாட்டேன்.. ஒழுங்காக விளையாடுங்கள்; ரோகித் சர்மா சுளீர்

ஷேன் வாட்சன் பேசும்போது, "டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்றால், நான் எப்போதும் விராட் கோலியை கூறுவேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வரம்பை தக்க வைக்கும் அவரது திறமை, அனைத்து வடிவங்களிலும் ரேஞ்சை தொடர்ந்து பராமரிக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு செல்லும்போது ஒருவிதமான ஆக்ரோஷத்தை உங்களால் பார்க்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்றால் தற்போது சிறந்தவர் விராட் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.   

ஸ்டீவ் ஸ்மித் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரத்தில் இருந்து வெளியேறிவிட்டார். சிறந்த ஃபார்மில் இருக்கும்போது அவர் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தது போல் தெரியவில்லை. பாபர் அசாம் இப்போது நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது ஆட்டத்தை எப்படி மாற்றியமைத்துள்ளார் என்பதை நாம் பார்க்க வேண்டும். எனவே பாபர் அசாம் தற்போது நம்பர்-2 ஆக இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார். கோலி இதுவரை 102 டெஸ்டில் விளையாடி 49.53 சராசரியில் 8074 ரன்களையும், பாபர் 42 டெஸ்டில் விளையாடி 47.30 சராசரியில் 3122 ரன்களையும் எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | இவரை கண்டுகொள்ளாத பிசிசிஐ; ஆசியக்கோப்பையில் இந்திய அணிக்கு பின்னடைவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News